News November 19, 2025
கடவூர்: பாம்பு கடித்ததில் பெண் உயிரிழப்பு!

கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா சென்னம்பட்டியைச் சேர்ந்த வீரப்பன் மனைவி வசந்தா (50). கூலித் தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் கோட்டைமேடு பகுதியில் உள்ள தனது மற்றொரு வீட்டில் இருந்தபோது பாம்பு கடித்ததாகவும் பிறகு குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்த்த போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் கணவர் வீரப்பன் அளித்த புகாரில் குளித்தலை போலீசார் நேற்று வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 20, 2026
வெள்ளியணை அருகே வசமாக சிக்கிய இருவர்: அதிரடி கைது

கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகே அழகாபூரியனூரில் உள்ள தோட்டத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற வெள்ளியணை போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட தேவசிகவுண்டன் புதூரைச் சேர்ந்த ரவி 51 மற்றும் அழகா பூரியனூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலம் 65 ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் 52 சீட்டுகள், ரூபாய் 100 பறிமுதல் செய்தனர்.
News January 20, 2026
அறிவித்தார் கரூர் மாவட்ட ஆட்சியர்!

கரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டணமில்லாப் பேருந்து பயணச்சலுகையைப் பெற, முதன்முறையாக ஆன்லைன் பஸ்பாஸ் (Online Bus Pass) திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இ-சேவை மையங்கள் வாயிலாகப் பதிவு செய்து இந்தச் சலுகையைப் பெற்றுக்கொள்ளலாம். இதற்காகக் கரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சிறப்பு முகாம்கள் வரும் ஜன.30 வரை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
News January 20, 2026
குளித்தலை அருகே விபத்து: ஒருவர் பலி

குளித்தலை அடுத்த எருமைகாரனூரைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளி கனகராஜ் (33), கடந்த 17-ம் தேதி பொங்கல் பொருட்கள் வாங்கிவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினார். பஞ்சப்பட்டி மாரியம்மன் கோவில் அருகே சாலையோரக் குழிக்குள் பைக்குடன் விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து லாலாப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


