News November 19, 2025

கடவூர்: பாம்பு கடித்ததில் பெண் உயிரிழப்பு!

image

கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா சென்னம்பட்டியைச் சேர்ந்த வீரப்பன் மனைவி வசந்தா (50). கூலித் தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் கோட்டைமேடு பகுதியில் உள்ள தனது மற்றொரு வீட்டில் இருந்தபோது பாம்பு கடித்ததாகவும் பிறகு குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்த்த போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் கணவர் வீரப்பன் அளித்த புகாரில் குளித்தலை போலீசார் நேற்று வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News January 13, 2026

கரூர்: பெண்ணை அதிரடியாகக் கைது செய்த போலீசார்!

image

கரூர் மாவட்டம் கூடலூர் பனையம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி மனைவி மகேஸ்வரி சக்தி (42). இவர் அப்பகுதியில் உள்ள தனது வீட்டின் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற சின்னதாராபுரம் போலீசார் மது விற்ற மகேஸ்வரி சக்தி மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 28 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்

News January 13, 2026

கரூர்: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377

2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639

3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832

4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098

5.முதியோருக்கான அவசர உதவி -1253

6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033

7.கடலோர பகுதியில் அவசர உதவி-1093

8.ரத்த வங்கி – 1910

9.கண் வங்கி -1919

10.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989

News January 13, 2026

கரூரில் களைகட்ட போகும் ஜல்லிக்கட்டு!

image

கரூர் ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு போட்டிக்கு, நாளை முதல் இணையதளத்தில் பதிவு செய்யலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். வரும், 17ல் பொங்கல் பண்டி-கையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. இதில், மாடுபிடி வீரர்கள் மற்றும் பங்கேற்கும் காளைகளுக்கான பதிவுகளை karur.nic.in என்ற இணையதளம் மூலம் நாளை காலை 8:00 மணி முதல் 16ம் தேதி காலை 8:00 மணி வரை இணையவழி பதிவுகள் மேற்கொள்ளலாம் என அறிவிப்பு!

error: Content is protected !!