News June 19, 2024

கடலூர்: 67 போலீஸ் ஏட்டுகள் பதவி உயர்வு

image

கடலூர் மாவட்டத்தில் திருப்பாபுலியூர் ஏட்டுகள் அன்வர்அலி,ஜெயக்குமார்,புதுநகர் ஏட்டுகள் பத்மநாபன்,வெற்றிசெல்வன்,ராஜாராம்,உலகநாத, போக்குவரத்து பிரிவு ஏட்டுகள் மணிகண்டன்,பத்மநாபன்,முதுநகர் ஏட்டு சிவா உள்பட 59 தாலுகா போலீஸ் ஏட்டுகளும்,ஆயுதப்படை போலீஸ் ஏட்டுகள் 8 பேர் என மொத்தம் 67 ஏட்டுகள் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு அளித்து விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. திஷாமித்தல் உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News January 24, 2026

கடலூர்: ரூ.6 செலுத்தினால், ரூ.1 லட்சம் கிடைக்கும்!

image

கடலூர் மக்களே.. போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ், நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். குறிப்பாக, குழந்தைகளின் பெற்றோருக்கு 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். SHARE!

News January 24, 2026

கடலூர்: உங்க பணத்தை பாதுகாக்க இத பண்ணுங்க!

image

கடலூர் மக்களே.. உங்கள் Gpay, phonepe, paytm போன்றவற்றில் தானாக பணம் போகிறதா? அதனை தடுக்க அருமையான வழி. அதற்கு <>upihelp.npci.org.in என்ற<<>> இணைய தளம் சென்று மொபைல் எண்னை உள்ளிடவும். பின் Show my AUTOPAY Mandates என்பதை கிளிக் செய்து Mandates நிலையைச் சரிபார்த்து, ரத்து செய்யக் கோரலாம். இதன் மூலம் தானியங்கி பணப்பரிமாற்றத்தைத் தவிர்க்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News January 24, 2026

கடலூர்: தீக்குளித்து முதாட்டி பலி

image

அண்ணாகிராமம் அடுத்த பத்திரக்கோட்டை அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் ராசாத்தி (68). இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது சேலையில் தீ வைத்து கொண்டதாக கூறப்படுகிறது. அதனையடுத்து தீக்காயத்துடன் ஆபத்தான நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

error: Content is protected !!