News March 26, 2024
கடலூர் 10ம் வகுப்பு பொது தேர்வு கலெக்டர் ஆய்வு

கடலூர் மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. இந்த தேர்வை கடலூர் மாவட்டத்தில் 438 பள்ளிகளில் பயிலும் 17,194 மாணவர்கள், 15,778 மாணவிகள் என மொத்தம் 32,972 பேர் தேர்வு எழுதுகின்றனர்.இதற்காக மொத்தம் 152 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 1,957 தனித் தேர்வர்கள் 7 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர். இதில் கடலூர் மஞ்சகுப்பம் அரசு பள்ளியில் கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டார்.
Similar News
News November 13, 2025
கடலூர்: ஆதார் அட்டை திருத்தம் இனி ஈஸி!

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.மேலும் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே <
News November 13, 2025
கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வெளியிட்ட செய்தி குறிப்பில், பெருமாள் ஏரி, ஸ்ரீ நெடுஞ்சேரி ஏரி, ஸ்ரீ புத்தூர் ஏரி, குணமங்கலம் ஏரி, குன்னத்தூர் ஏரி, வாலாஜா ஏரி உள்ளிட்ட 33 ஏரிகளுக்கு 3 ஆண்டு கால மீன் பிடி குத்தகைக்கு நவ.11 முதல் மின்னணு ஒப்பந்தப்ப புள்ளி வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு www.tntenders.gov.in என்ற இணையதளத்தை அணுகலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
News November 13, 2025
கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று (நவ.12) இரவு 10 மணி முதல் இன்று (நவ.13) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


