News November 26, 2025
கடலூர் மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் இறால் மற்றும் உவர் மீன் வளர்ப்போர் மானியத்துடன் கூடிய புதிய குளங்கள் அமைத்திட விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். இறால் வளர்ப்போரை ஊக்குவிக்கும் விதமாக அதிகபட்சமாக ரூ.5.40 லட்சம் மானியமாக வழங்கப்படும். இதற்கு 31.12.2025-க்குள் பரங்கிப்பேட்டை மீன்வளத்துறை அலுவலகத்தில் உரிய ஆவணத்துடன் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 21, 2026
கடலூர்: இளைஞர் மீது பாய்ந்த குண்டாஸ்

கடலூர் மாவட்டம் திருமாந்துறை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் ராமநத்தத்தில் தொழுதுரை சேர்ந்த பிரவீன்(26) என்பவரிடம், கத்தியை காட்டி மிரட்டி ரூ.500 பறித்த வழக்கில், ராமநத்தம் போலீசார் வேல்முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதால், எஸ்பி ஜெயக்குமார் பரிந்துரையில் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.
News January 21, 2026
கடலூர் மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு

கடலூர் மாவட்டம் கோரணப்பட்டு துணை மின் நிலையத்தில் நாளை (ஜன.22) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனன் காரணமாக கோரணப்பட்டு, அம்பலவாணன்பேட்டை, வழுதலம்பட்டு, தெற்கு வழுதலம்பட்டு, புலியூர், சமட்டிக்குப்பம், திரட்டிக்குப்பம், புலியூர் காட்டுசாகை, கிருஷ்ணங்குப்பம், சந்தப்பேட்டை பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை செய்யப்படுமென குறிஞ்சிப்பாடி மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்தார்.
News January 21, 2026
கடலூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

கடலூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.20) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.21) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


