News August 6, 2025

கடலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம்

image

கடலூர் மாவட்ட மகளிர் திட்டம் மூலமாக வருகின்ற (ஆக.9) அன்று பெண்ணாடம் தனியார் பள்ளியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், இளைஞர்கள் அனைவரும் கல்வி சான்றுகளுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு 94440 94260 APO(S&P), 94440 94258 APO(IB&CB), 94440 94259 APO(IF), 94440 94262APO (M&E) ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

Similar News

News November 13, 2025

கடலூர்: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

image

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், கடலூர் மாவட்ட மக்கள் 04142-233816 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

News November 13, 2025

கடலூர்: பஸ் மோதி பரிதாப பலி

image

பண்ருட்டி அடுத்த பட்டாம்பாக்கத்தில் இருந்து அண்ணாகிராமம் செல்லும் சாலையில் கடந்த நவ.5-ம் தேதி, சாலையோரம் நடந்து சென்ற அடையாளம் தெரியாத நபர் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த நபர், கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பண்ருட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News November 13, 2025

கடலூர் அருகே விவசாயி தூக்கிட்டு தற்கொலை

image

பரங்கிப்பேட்டை அடுத்த கறிக்குப்பத்தை சேர்ந்தவர் விவசாயி முத்தமிழ்செல்வன் (34). இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார். இதனால் மனமுடைந்த முத்தமிழ்செல்வன் நேற்று தன்னுடைய வீட்டின் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!