News October 12, 2025

கடலூர்: மனைவி திட்டியதால் கணவன் தற்கொலை

image

ஒரத்தூர் அடுத்த சக்திவிளாகம் கிராமத்தை சேர்ந்தவர் தொழிலாளி சேகர்(60). இவருக்கும், இவரது மனைவி சுசிலா தேவிக்கும்(50), இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதில், மனமுடைந்த சேகர் விஷத்தை குடித்துள்ளார். பின்னர் சிதம்பரத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஒரத்தூர் போலீசார் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News

News December 6, 2025

கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று (டிச.5) இரவு 10 மணி முதல் இன்று(டிச.6) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 6, 2025

கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று (டிச.5) இரவு 10 மணி முதல் இன்று(டிச.6) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 5, 2025

கடலூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு!

image

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று டிச.5 ஆம் தேதி காலை 8.30 மணி நிலவரப்படி ஶ்ரீ முஷ்ணம் 7.3 மில்லி மீட்டர், எஸ்ஆர்சி குடிதாங்கி 6 மில்லி மீட்டர், தொழுதூர் 5 மில்லி மீட்டர், விருத்தாசலம் 4.2 மில்லி மீட்டர், காட்டுமன்னார்கோவில், குப்பநத்தம் தலா 3 மில்லி மீட்டர், லால்பேட்டை 2 மில்லி மீட்டர், வானமாதேவி 1.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

error: Content is protected !!