News April 9, 2024
கடலூர் அருகே 161 பேர் கைது செய்து விடுதலை

வடலூர் சத்திய ஞானசபை பகுதி பெருவெளியில் சர்வதேச மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பார்வதிபுரம் கிராம மக்கள் கட்டுமானத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இறங்கி நேற்று(ஏப்.8) போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற வடலூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 91 பெண்கள், 70 ஆண்கள் ஆகிய 161 பேரை கைது செய்து மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
Similar News
News December 5, 2025
கடலூர் அருகே இளைஞர் மீது துப்பாக்கி சூடு

கிள்ளை அடுத்த பின்னத்தூரை சேர்ந்தவர் தவுசிக் (18). அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பரான முஸ்தபா (18) தவுசிக்கின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவர் தவுசிக் தந்தையின் பழைய ஏர் கன் வகை துப்பாக்கியை எடுத்து பார்த்த கொண்டிருந்த போது தவறுதலாக தவுசிக்கின் வலது காலில் சுட்டதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த தவுசிக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து கிள்ளை போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 5, 2025
கடலூர்: பட்டா வைத்திருப்போர் கவனத்திற்கு …

கடலூர் மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில்<
News December 5, 2025
கடலூர்: 12 வயது சிறுமி கர்ப்பம்; இளைஞர் கைது

சேத்தியாத்தோப்பு அருகே 12 வயது சிறுமி செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அதே சூளையில் வேலை பார்த்து வந்த மணிகண்டன் (26) என்பவர் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதில் அவர் கருவுற்றார். இதையடுத்து மருத்துவனையில் சிறுமியை பரிசோதித்த மருத்துவர் அளித்த புகாரின் பேரில் சேத்தியாதோப்பு போலீசார் மணிகண்டனை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர்.


