News April 2, 2025

கடலூர் அருகே ஒருவர் என்கவுண்டர்

image

கடலூர் அருகே உள்ள புதுச்சத்திரம் பகுதியில் லாரி ஓட்டுநரிடம் 6 பேர் கொண்ட கும்பல் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து அவர்களை போலீசார் தேடி வந்த நிலையில், வழிப்பறி கும்பலைச் சேர்ந்த விஜய் என்பவர் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். என்கவுண்டர் செய்யப்பட்டவர் புதுச்சேரியைச் சேர்ந்த விஜய் என்பதும், அவர் மீது 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்துள்ளது.

Similar News

News January 17, 2026

கடலூர்: 3 கிலோ கஞ்சாவுடன் சிக்கிய இளைஞர்கள்

image

நடுவீரப்பட்டு போலீஸ் எஸ்.ஐ. ராஜேந்திரன் மற்றும் போலீசார் நேற்று நரியங்குப்பம் ஓடை அருகில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு 3 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த பண்ருட்டி அடுத்த பணிக்கன்குப்பத்தை சேர்ந்த சபாபதி மகன் நவீன் (25), கடலூர் ராணிப்பேட்டையை சேர்ந்த செல்வம் மகன் அருண்குமார் (18), நரியங் குப்பத்தை சேர்ந்த வேல்முருகன் மகன் சசிகுமார் (22) ஆகியோரை கைது செய்தனர்.

News January 17, 2026

கடலூர்: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

image

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு கடலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.

News January 17, 2026

கடலூர்: போலீஸ் எஸ்.ஐ. விபத்தில் பலி

image

சிதம்பரம் அடுத்த மதுராந்தகநல்லூரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (60). சேத்தியாத்தோப்பு போலீஸ் நிலையத்தில் எஸ்.ஐ. ஆக பணிபுரிந்த இவர் நேற்று இரவு பணி முடிந்ததும் தனது பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டார். வி குமாரமங்கலம் அருகில் சென்ற போது எதிர்பாராத விதமாக பைக்கில் இருந்து கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்த ரவிச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கம்மாபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!