News November 13, 2025
கடம்பூர் அருகே யானை உயிரிழந்தது!

சத்தியமங்கலம் வனச்சரகம், குத்தியாலத்தூர் காப்புக்காடு, கொண்டப்பநாயக்கன் பாளையம் காவல் சுற்று, வனப்பகுதிக்குள் வனப்பணியாளர்கள் ரோந்து சுற்றி வரும் பொழுது, பெண் யானை ஒன்று இறந்து கிடந்ததை பார்த்துள்ளனர். யானை உடலில் காயங்கள் இல்லாதால் இயற்கை மரணம் என வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும், யானை உடல் அரசு வழிகாட்டுதல் படி பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.
Similar News
News December 4, 2025
ஈரோடு: இரவு ரோந்து காவல் அதிகாரிகள் விபரம்

ஈரோடு மாவட்டத்தில் இன்று (04/12/2025)சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், இரவு நேர குற்றங்களைத் தடுக்கவும், மாவட்டக் காவல்துறை சார்பில் இன்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், கீழ்க்கண்ட உதவி எண்களைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
News December 4, 2025
அறிவித்தார் ஈரோடு ஆட்சியர்!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் மொத்தம் உள்ள 19,97,189 வாக்காளா்களில் புதன்கிழமை வரை 19,28,231 (96.55 சதவீதம்) படிவங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. மீதமுள்ள 68,958 வாக்காளா்களிடம் கணக்கீட்டுப் படிவங்கள் பெறப்பட வேண்டியுள்ளன. மீதமுள்ள படிவங்களை திரும்பப் பெறுவது குறித்து பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தார்.
News December 4, 2025
ஈரோடு: ரேஷன் கடையில் கைரேகை வேலை செய்யலையா?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <


