News August 5, 2024

கடன் பிரச்சனையால் நெசவாளர் தூக்கிட்டு தற்கொலை

image

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட சின்ன காஞ்சிபுரம் விஷ்ணு காஞ்சி காவல் நிலையம் எதிரே உள்ள மண்டபம் அருகே நெசவாளர் அன்பு வசித்து வருகிறார். இவர் பல்வேறு வங்கியில் இருந்து கடன் பெற்று நெசவு தொழில் செய்து வந்த நிலையில், போதிய வருமானம் இல்லாததால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால், வங்கி அதிகாரிகளுக்கு பயந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Similar News

News January 12, 2026

காஞ்சிபுரத்தில் டாஸ்மாக் கடைகள் மூட ஆட்சியர் உத்தரவு!

image

தமிழ்நாடு மதுபானம் (உரிமம் & அனுமதி) விதிகள் 1989 விதி 23 நிபந்தனைகளின் படி, திருவள்ளுவர் தினம் (16.01.2026, வெள்ளிக்கிழமை) குடியரசு தினம் (26.01.2026, திங்கள் கிழமை) ஆகிய நாட்களில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து இந்திய தயாரிப்பு அயல்நாட்டு டாஸ்மாக் மதுபான கடைகள் (IMFL) அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் மூடப்பட வேண்டும், என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைசெல்வி மோகன் தெரிவித்துள்ளார்.

News January 12, 2026

காஞ்சிபுரம்: போன் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

காஞ்சி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <>கிளிக் <<>>செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News January 12, 2026

காஞ்சிபுரம் முழுவதும் 7 வட்டாட்சியர்கள் மாற்றம்!

image

காஞ்சிபுரம் தாசில்தார் ரபீக் இருங்காட்டுக்கோட்டை நில எடுப்பு பிரிவு தனித் தாசில்தாராக தற்போது மாற்றம். உத்தரமேரூர் தாசில்தாராக இருந்த ஆர்.சுந்தர் கேபிள் டிவிக்கு மாற்றப்பட்டு உள்ளார். பரந்தூர் விமான நிலைய தாசில்தார் நிலை எடுப்பு பிரிவு நடராஜன் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு உத்திரமேரூர் வட்டாட்சியராக நியமிக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர், இன்று (ஜன.12) உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!