News April 2, 2025
‘கச்சத்தீவு விவகாரத்தில் சட்டப் போராட்டம் தேவை’

மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் அகில இந்திய மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் சண்முகம் பேட்டியளித்துள்ளார். அதில், கச்சத்தீவு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கில் சட்டப் போராட்டம் நடத்தி தீர்வு காண வேண்டும். தமிழ்நாடு மீனவர்களின் உயிர், உடைமை பாதுகாக்கப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது என்றார்.
Similar News
News January 20, 2026
மதுரை: சிறுமி மர்மமான முறையில் உயிரிழப்பு

கல்லுப்பட்டி அருகே குன்னத்துரை சேர்ந்தவர் இருளாண்டி மகள் முத்துலட்சுமி (16). இவர் அவரது வீட்டில் தூக்கில் தொங்கி இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்த குன்னத்தூர் விஏஓ பாலமுருகன்(36) அங்கு சென்று ஆய்வு செய்தார். தூக்கில் தொங்கிய சிறுமியின் முகத்தில் காயங்கள் இருக்கவே அது குறித்து அவர் கல்லுப்பட்டி போலீசில் புகார் செய்தார். கல்லுப்பட்டி போலீசார் சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து இன்று விசாரிக்கின்றனர்.
News January 20, 2026
மதுரை: 10 th முடித்தால் மத்திய அரசு வழங்கும் ரூ.15,000 APPLY..

மதுரையில் 10, 12-ம் வகுப்பு, ஐடிஐ, பாலிடெக்னிக் மற்றும் BE., முடித்தவர்களுக்கான தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நாளை (ஜன.21) காலை 9 மணிக்கு மூன்று மாவடியில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது. தேர்வாகும் நபர்களுக்கு ரூ.15,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். அசல் சான்றிதழ்களுடன் பங்கேற்கலாம் என ஆட்சியர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார். விவரங்களுக்கு: 9499055748 க்கு அழைக்கலாம்.
News January 20, 2026
மதுரை: இனி Whats App மூலம் ஆதார் அட்டை.!

மதுரை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை 9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இந்த செய்தியை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.


