News July 12, 2024
ஓய்வூதியம் பெற கோரிக்கை விண்ணப்பம் வரவேற்பு

உதகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் எதிர்வரும் ஜூலை 26ஆம் தேதி காலை 10:30 மணி அளவில் நடைபெற உள்ளது. எனவே ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வூதிய பலன்கள் கிடைக்க பெறாதவர்கள் தங்களது குறைகள் அடங்கிய விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியருக்கு தபால் மூலம் வருகின்ற 15ஆம் தேதிக்கு முன்னர் அனுப்ப வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மு.அருணா தெரிவித்துள்ளார்.
Similar News
News July 8, 2025
நீலகிரி: குன்னூர் சாலை விபத்தில் ஒருவர் பலி!

நீலகிரி: குன்னூர் பாய்ஸ் கம்பெனி பகுதியில் இன்று காலை இருசக்கர வாகனமும் கனரக வாகனமும் மோதிக்கொண்டதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற மைக்கேல் என்பவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இவர் உபதலையைச் சேர்ந்த இவரது உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தன்பர். மேலும், இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News July 7, 2025
நீலகிரி: மகளிர் அதிகார மையத்தில் வேலைவாய்ப்பு

நீலகிரி மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் காலியாக உள்ள கணக்கு உதவியாளர், தகவல் தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தேர்வு நடைபெற உள்ளது. மாத ஊதியம் ரூ.12,000-20,௦௦௦ வழங்கப்படும். விண்ணப்பங்களை ஜூலை 20, 2025 குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்தார். மேலும் விபரங்களுக்கு (0423 2443392) எண்னை அணுகவும்.
News July 7, 2025
நீலகிரி: ரூ.5.00 இலட்சம் வரை மானியம் வழங்கும் திட்டம்

நீலகிரி: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்கள் விவசாய நிலம் வாங்க நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டத்தில் ரூ.5.00 இலட்சம் வரை மானியம் மற்றும் 100 % நிலங்களுக்கு முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு நீலகிரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தை அணுகலாம் . ஷேர் பண்ணுங்க !