News November 14, 2025
ஒட்டன்சத்திரத்தில் தொழிலாளி துடிதுடித்து பலி!

ஒட்டன்சத்திரம் அருகே காப்பிலியபட்டி கிராமத்தைச் சேர்ந்த 46 வயது கட்டத் தொழிலாளி பெருமாள், நேற்று ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலையில் தனியார் கட்டடத்தில் மின்தூக்கி இயக்கி பணியாற்றும்போது 3-ஆவது மாடியிலிருந்து விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஒட்டன்சத்திரம் போலீஸ் சம்பவத்தை விசாரித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News December 12, 2025
திண்டுக்கல்: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

திண்டுக்கல் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! SBI-09223766666,HDFC – 18002703333, AXIS – 18004195959, Union Bank – 09223008586, Canara Bank – 09015734734,BOB – 8468001111,Indian Bank – 9677633000, IOB – 96777 11234! மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் பண்ணுங்க!
News December 12, 2025
திண்டுக்கல்லில் ரூ.43.86 லட்சம் மோசடி! உஷார்

திண்டுக்கல், பழைய வக்கம்பட்டியை சேர்ந்த உதயகுமார் (40) ‘வாட்ஸ் ஆப்’ மூலம் வந்த குறுந்தகவல் பின்பற்றி ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டார். ரூ.43.86 லட்சத்தை முதலீடு செய்து கணக்கில் 1.92 கோடி காணப்பட்டபோது, பணம் வங்கிக்கணக்கில் வரவில்லை. சிறிது நேரத்தில் வர்த்தக செயலி முடக்கப்பட்டுள்ளது. மோசடி உணர்ந்த உதயகுமார், சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 12, 2025
வத்தலகுண்டில் கார்–டூவீலர் மோதி விபத்து; ஒருவர் படுகாயம்

வத்தலகுண்டு–திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை 10 மணியளவில் மகேந்திரா கார், டூவீலரை நேருக்கு நேர் மோதியது. இதில் டூவீலரில் பயணித்த சதீஷ்குமார் படுகாயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளார். விபத்தினால் அப்பகுதியில் தற்காலிகமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இச்சம்பவத்துக்கு காரணமான கார் டிரைவர் விபத்துக்குப் பிறகு இடத்திலிருந்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


