News August 6, 2025
ஒசூா் அருகே குழந்தை உயிரிழப்பு

திருவண்ணாமலையைச் சோ்ந்தவா் சிலம்பரசன். இவா் ஒசூா் பகுதியில் குடியிருந்து ஓட்டுநராக வேலை செய்து வருகிறாா். இவரது இரண்டரை வயது மகன் பைரவன். கடந்த 31-ம் தேதி வீட்டில் குளியல் அறையில் கொதிக்கும் தண்ணீரில் தவறி விழுந்தாா். உடல் முழுவதும் காயம் அடைந்த பைரவனை மீட்டு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 11, 2025
கிருஷ்ணகிரி: இன்று எங்கெல்லாம் கரண்ட் கட்?

கிருஷ்ணகிரி, சூளகிரி, குருபரப்பள்ளி, போச்சம்பள்ளி, காமன்தொட்டி துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பணிகள் நாளை நடைபெறுகின்றன. இதனால், சூளகிரி நகர், உலகம், மாதரசனப்பள்ளி, ஏனுசோனை, சின்னார், சாமல்பள்ளம், பீர்பள்ளி, பிக்கனப்பள்ளி, காமன்தொட்டி, கோனேரிப்பள்ளி, பாதகோட்டை, தேன்கனிக்கோட்டை, மாரசந்திரம் புளியம்பட்டி & அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி-மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும். ஷேர்!
News November 11, 2025
கிருஷ்ணகிரி: கழிவறை தொட்டியில் விழுந்த குழந்தை பலி!

மத்தூர் அருகே உள்ள எம். ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்த மதுரைவீரன் (22) மனைவி பரமேஸ்வரி. இவர்களுக்கு வசந்த் (2) என்கிற ஆண் குழந்தை உள்ளது. நேற்று மாலை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை வசந்த் பக்கத்து வீட்டு கழிவறை குழி திறந்து இருந்ததால் தவறி விழுந்து உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த மத்தூர் போலீசார் குழந்தையின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 11, 2025
கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை.

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை, உங்கள் போனிற்கு குறைந்த வட்டியில் லோன் வழங்குவதாக SMS வந்தால், அதில் உள்ள எண்ணை தொடர்பு கொள்ள வேண்டாம். இது போலி நிதி மோசடி ஆகும். அவர்கள் உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பெற்று பணம் பறிப்பார்கள். மேலும், இதுபோன்ற மோசடிகள் குறித்து உடனடியாக https://www.cybercrime.gov.in தளத்தில் புகார் அளிக்கலாம் அல்லது 1930 எண்ணை அழைக்கலாம்.


