News May 16, 2024
எஸ்.பி-யிடம் கவுன்சிலர்கள் புகார் மனு

மணவாளக்குறிச்சி பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் கவுன்சிலர்களை மக்கள் பணி செய்ய விடாமல் தடுப்பதாக கூறப்படுகிறது. மேலும் கவுன்சிலர்களுக்கு கொலை மிரட்டல் விட்ட ரவுடி பிபின் பிரியன் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பஞ்சாயத்து துணை தலைவர், கவுன்சிலர்கள் இன்று புகார் மனு அளித்தனர். நடவடிக்கை எடுக்க தவறினால் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
Similar News
News November 7, 2025
குருந்தன்கோட்டில் தேனீ வளர்ப்பு பயிற்சி

குருந்தன்கோடு வட்டாரத்தில் தோட்டக்கலை, மலைப்பயிர்கள் துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் விவ சாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி நாகர்கோவில் ஆத்திக்காட்டு விளையில் அடுத்த வாரம் துவங்கப்படுகிறது. இதில் 15 நாட்கள் பயிற்சி வழங்கப்படும் நிலையில் ஆர்வமுள்ளவர்கள் http://candidate.tnskill.tn.gov.in/skillwallet/ மூலம் விண்ணப்பிக்கலாம் என தோட்டக்கலை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
News November 7, 2025
குமரி முதன்மை கல்வி அலுவலர் பதவியேற்பு

கன்னியாகுமரி மாவட்ட புதிய முதன்மைக் கல்வி அலுவலராக R. பிரின்ஸ் ஆரோக்கியராஜ் நேற்று 06/11/2025 பணியேற்றுக்கொண்டார். ராமநாதபுரம் மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரியாக இருந்த இவர், பதவி உயர்வு பெற்று கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக நியமிக்கபட்டுள்ளார். குமரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக இருந்த பாலதண்டாயுதபாணி சிவகங்கை மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
News November 6, 2025
குமரி: 10th போதும் அரசு வேலை-தேர்வு இல்லை!

அணுசக்தித் துறையில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாயுள்ளது
1. வகை: மத்திய அரசு
2. காலியிடங்கள்: 405
3. கல்வித் தகுதி: 10th & ITI Pass in respective trades
4.சம்பளம்: ரூ.9,600 – ரூ.10,560
5. கடைசி நாள்: 15.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க…


