News February 22, 2025
எம்.பி வீட்டின் முன்பு இந்தி திணிப்பு எதிர்ப்பு வாசகம்

மத்திய அரசின் கட்டாய இந்தி திணிப்புக்கு எதிராக திமுக சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டங்களும், கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக நேற்று (பிப்ரவரி 21) வேலூர் காட்பாடியில் உள்ள எம்.பி கதிர் ஆனந்த் வீட்டின் முன்பு ‘இந்தி திணிப்பை ஏற்க மாட்டோம்’ என்றும் தமிழ் வாழ்க என எழுதப்பட்டு இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
Similar News
News July 8, 2025
வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வழிகாட்டுதலின்படி, ACTU & IUCAW போலீசார், நேற்று (ஜூலை 07) தேதி வேலூர் விருபாட்சிபுரம் தேசியா மேல் நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகள் மற்றும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, பெண்கள் தொடர்பான உதவி எண் 181, குழந்தைகள் உதவி எண் 1098, குழந்தை திருமணம் மற்றும் போக்சோ குறித்து விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
News July 8, 2025
வாடகை வீட்டில் வசிப்போர் கவனத்திற்கு 2/2

தமிழ்நாடு வீட்டு வாடகை முறைப்படுத்துதல் புதிய சட்டம் 2017: *குடியிருப்பவர் வீட்டிற்குள் வீட்டு உரிமையாளர் காலை 7 மணிக்கு முன்பு, இரவு 8 மணிக்கு பின்னர் செல்ல கூடாது. *3 மாத வாடகையை மட்டுமே முன்பணமாக பெற வேண்டும். *ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட வாடகையை மட்டுமே பெற வேண்டும். *ஒப்பந்தம் முடியாமல் வீட்டை காலி செய்ய சொல்ல கூடாது. *கட்டாயம் ரசிது தர வேண்டும். *ஒப்பந்ததை பதிவு செய்ய வேண்டும். ஷேர் பண்ணுங்க
News July 8, 2025
வாடகை வீட்டில் வசிப்போர் கவனத்திற்கு 1/2

வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்னை, குடிநீர் பிரச்னை, கரண்ட் பிரச்னை என வாடகை வீட்டில் குடியிருப்போர் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம். அவர்களின் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்க வீட்டு உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு தந்தாலோ உதவி எண் (1800 599 01234) வேலூர் மாவட்ட அதிகாரியிடம் (9445000417, 9445463333) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க. தொடர்ச்சி