News April 11, 2024

எங்களின் ரத்த உறவுகளுக்கு புனித ரமலான் 

image

மத நல்லிணக்கத்தை பாதுகாக்கும் வகையில் பழனி, நெய்க்காரப்பட்டி, பெரியகலையம்புத்தூர் ஸ்ரீ ஹைகோர்ட் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு உட்பட்ட ஊர் பொதுமக்கள் ரமலான் வாழ்த்து கூறி பேனர் வைத்துள்ளனர். அதில், “மதத்தால் இணைந்த மனிதர்கள் அல்ல நாங்கள்; மனதால் இணைந்த மனிதர்கள்; எங்களின் ரத்த உறவுகளுக்கு புனித ரமலான் மற்றும் ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டுள்ளது. 

Similar News

News November 13, 2025

திண்டுக்கல்லில் மீன் குஞ்சுகள் விற்பனைக்கு தயார்

image

திண்டுக்கல்லில் கட்லா, ரோகு, மிர்கால் 16 லட்சம் வளர்த்தெடுக்கப்பட்டு விற்பனை
மீன் குஞ்சுகள் விற்பனைக்கு தயாராக உள்ளது என கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார். மேலும், தகவலுக்கு அணைப்பட்டி மீன்வள சார் ஆய்வாளர் பாப்பத்தியை கைபேசி 63748 26415 என்ற எண்ணிலும், பழநி மீன்வள ஆய்வாளர் சாந்தியை கைபேசி 75982 36815 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

News November 13, 2025

நத்தம்: வெளிநாட்டில் கணவன்.. மனைவி அதிர்ச்சி முடிவு!

image

நத்தம் அருகே ஒத்தினிப்பட்டியை சேர்ந்தவர் கரந்தமலை (34). சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். அவரது மனைவி சிலம்பரசி (28). கடந்த 2 மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்த கரந்தமலை, கடந்த வாரம் மீண்டும் ஊருக்கு சென்று விட்டார். இதனால் ஏற்பட்ட கவலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிலம்பரசி சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 13, 2025

திண்டுக்கல்: ஹவுஸ் ஓனர் கவனத்திற்கு!

image

திண்டுக்கல் மாவட்ட மக்களே, வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, இனி அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் டிஜிட்டல் முறையில் முத்திரையிடப்பட வேண்டும். இதனை ஆன்லைனில் அல்லது உள்ளூர் துணைப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யலாம். அப்படி பதிவு செய்ய தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!