News June 19, 2024
ஊர்காவல் படையினருக்கான ஜூன்.30 எழுத்து தேர்வு

புதுச்சேரி பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், புதுச்சேரி காவல் துறையில் ஊர்க்காவல் படையில் சேர்வதற்கான எழுத்துப் போட்டி தேர்வு வரும் 30ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற உள்ளது. கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற உடல் தகுதி தேர்வில் தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள், இந்த தேர்வு எழுத தகுதி பெற்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 14, 2026
புதுச்சேரி மக்களுக்கு GOOD NEWS

புதுச்சேரி ஆதி திராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் அர்ஜூன் ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “புதுச்சேரி யூனியன்பிரதேசத்தில் ஆதிதிராவிட மக்களுக்கு பொங்கல் பண்டிகை முன்னிட்டு இலவச துணிக்கு பதிலாக மொத்தமாக 1,34,168 பயனாளிகளுக்கு ரூ.13,41,68,000 நிதி உதவி பயனாளிகளின் வங்கி கணக்குகளில் நேற்று நேரடியாக வரவு வைக்கப்பட்டது.” என தெரிவித்துள்ளார்.
News January 14, 2026
புதுவை: மயங்கி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

நெல்லித்தோப்பு, பெரியார் நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சார்லஸ் (45). மதுப்பழக்கமுள்ள சார்லசுக்கு நீரிழிவு நோய் இருந்துள்ளது. இந்நிலையில் திடீரென வீட்டில் மயங்கி விழுந்துள்ளார். உடனே அவரது மனைவி மேரி கணவரை ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசார் தற்போது வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 14, 2026
புதுச்சேரி: மதுக்கடைகள் அடைப்பு

உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவரின் நினைவைப் போற்றும் வகையில், ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவள்ளுவர் தினத்தை (ஜன.16) முன்னிட்டு, புதுச்சேரி யூனியன் பிரதேசம் முழுவதும் மதுக்கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. எதிர்வரும் 16.01.2026 (வெள்ளிக்கிழமை) அன்று ஒரு நாள் முழுவதும் மது விற்பனைக்குத் புதுவை அரசு தடை விதிக்கப்பட்டுள்ளது.


