News November 14, 2025
ஊராட்சிக்கோட்டை தொடக்கப்பள்ளிக்கு விருது!

2024-25 ஆம் ஆண்டிற்கான ஈரோடு மாவட்டத்தின் சிறந்த 3 தொடக்கப்பள்ளிகளில் பவானி அருகே உள்ள ஊராட்சிக்கோட்டை தொடக்கப்பள்ளியும் தேர்வாகி உள்ளது. அதற்கான விருது மற்றும் கேடயம் வழங்கும் விழா காரைக்குடியில் இன்று (நவ.14) நடந்தது. இதில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியையிடம் விருது மற்றும் கேடயங்களை வழங்கினார்.
Similar News
News December 16, 2025
கவுந்தப்பாடி அருகே வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது!

கவுந்தப்பாடி அடுத்த பழனிசாமி கவுண்டர் வீதி பகுதியைச் சேர்ந்தவர் சேகர். இவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரியை, விற்பனை செய்வதாக கவுந்தப்பாடி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதைத்தொடர்ந்து அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், போலியாக வெள்ளைத் தாளில் அச்சிடப்பட்ட எங்களை கொண்டு லாட்டரி என விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது, அதனை தொடர்ந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News December 16, 2025
கவுந்தப்பாடி அருகே வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது!

கவுந்தப்பாடி அடுத்த பழனிசாமி கவுண்டர் வீதி பகுதியைச் சேர்ந்தவர் சேகர். இவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரியை, விற்பனை செய்வதாக கவுந்தப்பாடி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதைத்தொடர்ந்து அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், போலியாக வெள்ளைத் தாளில் அச்சிடப்பட்ட எங்களை கொண்டு லாட்டரி என விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது, அதனை தொடர்ந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News December 16, 2025
அந்தியூர் அருகே பிடிபட்ட மர்ம விலங்கு

அந்தியூர் அருகே உள்ள சங்கரா பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி சின்னச்சாமி நேற்று இரவு அவரது வீட்டின் வாசலில் மர்ம விலங்கு படுத்திருப்பதை பார்த்து அதனை கூடை போட்டு மூடி வைத்துவிட்டு அந்தியூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார் அங்கு சென்ற வனத்துறையினர் அது புளுகு பூனை என தெரிவித்தனர். அதனை வனத்துறையினர் கைப்பற்றி அந்தியூர் வரட்டு பள்ளம் அணை வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.


