News March 29, 2024
ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை

தமிழகத்தில் 39 தொகுதிகளில் வருகின்ற ஏப்ரல்.19ஆம் தேத நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலில் அனைவரும் வாக்களித்து தங்களின் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என தேர்தல் ஆணையம் வலியுறுத்தி வருகிறது. மேலும் ஏப்ரல்.19ஆம் தேதி அன்று அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளத்துடன் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது,
Similar News
News January 24, 2026
திருவாரூர்: ஆக்கிரமிப்புகள் அகற்ற ஆலோசனைக் கூட்டம்

மன்னார்குடி காவல் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் வர்த்தக சங்கம் இணைந்து ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நேற்று (ஜன.23) மாலை நடத்தினர். மேலும் இதில், நகரின் போக்குவரத்து ஒழுங்கு படுத்துவது மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றல் குறித்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இக்கூடத்தில் வர்த்தக சங்க தலைவர் ஆனந்த், டிஎஸ்பி மணிவண்ணன், நகராட்சி ஆணையர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
News January 24, 2026
திருவாரூர்: ஒரே நாளில் 430 கிராம சபை கூட்டம்!

குடியரசு தினத்தனமான 26.01.2026 அன்று திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 430 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தினை, “பாகுபாடு இன்றி தனி அலுவலர்கள், பொதுமக்களுடன் இணக்கமாக செயல்பட்டு நடத்த வேண்டும்; ஊராட்சி நிர்வாகம், பொது செலவினம் குறித்த தணிக்கை அறிக்கை சமர்ப்பித்து பொதுமக்களின் கருத்துக்களை பெற்று தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும்.” என ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
News January 23, 2026
திருவாரூர் தேரை ஆழித்தேர் என்று அழைப்பது ஏன்?

ஆழி என்றால் பரந்து விரிந்த என்று பொருள். அதனால் தான், எந்தவிதமான நவீன இயந்திர வசதிகளும் இல்லாத பழங்காலத்தில் மனித உழைப்பினால் மட்டும் பரந்து விரிந்த பிரமாண்டமாக செய்யப்பட்ட தேரான திருவாரூர் தேரை ஆழித்தேர் என அழைக்கின்றனர். 1400 ஆண்டுகளுக்கு முன்பே “ஆழித்தேர் வித்தகனை நான்கண்ட தாரூரே” என்று திருநாவுக்கரசர் தேவாரத்தில் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்ங்க…


