News July 16, 2024

உ.பேட்டையில் புதிய பேருந்து நிலையம்: ஆட்சியர் ஆய்வு

image

உளுந்தூர்பேட்டையில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான இடம் குறித்து இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம் எஸ் பிரசாந்த் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் ஆகியோர் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே உளுந்தூர்பேட்டையில் பேருந்து நிலையம் அமைக்க அரசின் சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

Similar News

News July 8, 2025

கள்ளக்குறிச்சியில் கிராம, பகுதி, சமுதாய செவிலியர் ஆர்ப்பாட்டம்

image

தமிழகத்தில் 3,800 துணை சுகாதார நிலையங்களில் உள்ள கிராம சுகாதார செவிலியர் காலி பணியிடங்களை நிரப்பக் கோரி கலெக்டர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு செவிலியர் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவி சாந்தி, தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் ஜோதி இருதயமேரி முன்னிலை வகித்தார். மாநில செயலாளர்களான சுசீலா (பகுதி சுகாதார செவிலியர் சங்கம்), உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

News July 8, 2025

உள்ளூரில் வங்கி அதிகாரி வேலை

image

பேங்க் ஆப் பரோடா வங்கியில் ‘லோக்கல் பேங்க் ஆபிசர்’ எனப்படும் உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 2,500 பணியிடங்கள் நிரப்படுகின்றன. தமிழகத்தில் மட்டும் 60 பணியிடங்கள் உள்ளன. ரூ.48,480 – 85,920 வரை சம்பளம் வழங்கப்படும். தமிழ் தெரிந்திருக்க வேண்டும். டிகிரி இருந்தால் போதும் ஜூலை 24ஆம் தேதிக்குள் <>இந்த லிங்கில்<<>> விண்ணப்பிக்கலாம். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News July 8, 2025

எந்த வயத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும் 2/2

image

குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை இருந்தால் அந்த பெண் குழந்தைக்கு 3 வயது முடிவதற்குள் விண்ணப்பிக்க வேண்டும். இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் 2வது பெண் குழந்தைக்கு 3 வயது முடிவதற்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆதார் அட்டை, குடும்ப புகைப்படம் ஆகிய சான்றுகளுடன் அருகில் உள்ள இ-சேவை மையத்தில் உடனடியாக விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்குல் 04146-222288 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!