News October 10, 2024

உளுந்தூர்பேட்டையில் அதிகாரிகள் ஆய்வு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பேருந்து நிலையம் உள்ளது. இந்த பேருந்து நிலையம் போதுமான வசதிகள் இல்லாமல் உள்ளதால் புதிதாக பேருந்து நிலையம் கட்ட உளுந்தூர்பேட்டை நகராட்சி முடிவு செய்து அந்த பிரம்மாண்ட பேருந்து நிலையம் அமைய உள்ளது. அந்த இடத்தில் நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் சிவராஜ் ஐஏஎஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Similar News

News November 11, 2025

கள்ளக்குறிச்சி: 8 கிராம் தங்கம், ரூ.50,000 பணத்துடன் திருமணம்

image

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

News November 11, 2025

கள்ளக்குறிச்சி: விமான நிலையத்தில் வேலை வேண்டுமா?

image

12-ம் வகுப்பு/டிகிரி முடித்து வேலை தேடும் இளைஞர்களுக்கு சான்றிதழுடன் விமான நிலையத்தில் Cabin Crew, Air Cargo Introductory+ DGR உட்பட பல்வேறு பிரிவுகளில் பணி செய்ய வாய்ப்பை தாட்கோ ஏற்படுத்தி தருகிறது. இந்த 6 மாத பயிற்சிக்கான செலவுகளை தாட்கோ முற்றிலும் ஏற்கும். விண்ணப்பிக்க விரும்பும் 18 முதல் 23 வயதுடைய இளைஞர்கள் இங்கு <>கிளிக்<<>> செய்து மேலும் தகவல்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News November 11, 2025

கள்ளக்குறிச்சி: ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

image

கள்ளக்குறிச்சி: தென்செட்டியந்தல் கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன், நேற்று (நவ.10) ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பில் இருந்து போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். பின்னர், தனது வீட்டினை இடிக்க உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவை தடை செய்வதுடன், தாங்கள் வசிக்கும் இடத்திற்கு பட்டா வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை மனு வழங்கியுள்ளார்.

error: Content is protected !!