News March 30, 2025

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 5 ஒன்றியங்களில் உள்ள 274 ஊராட்சிகளிலும், உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, ஊராட்சி தலைவர்கள் தலைமையில் நேற்று (மார்.29) கிராம சபை கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில், மழைநீரை சேகரித்தல், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துதல், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் போன்ற விஷயங்கள், முக்கிய விவாத பொருளாக கிராம சபையில் பேசப்பட்டன. இதுசம்பந்தமாக தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

Similar News

News July 8, 2025

பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம் – ஆட்சியர் அறிவிப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜூலை 12 (சனிக்கிழமை) அன்று காலை 10:00 மணிக்கு பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்கள் நடைபெற உள்ளன. இம்முகாம்கள் காஞ்சிபுரம் வட்டத்தில் கீழ்கதிர்பூர், உத்திரமேரூர் வட்டத்தில் மலையாங்குளம், வாலாஜாபாத் வட்டத்தில் களக்காட்டூர், திருப்பெரும்புதூர் வட்டத்தில் கீவளுர், மற்றும் குன்றத்தூர் வட்டத்தில் நாட்டரசன்பட்டு ஆகிய கிராமங்களில் மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பின்படி நடைபெறும்.

News July 8, 2025

வாடகை வீட்டில் வசிப்போர் கவனத்திற்கு 2/2

image

தமிழ்நாடு வீட்டு வாடகை முறைப்படுத்துதல் புதிய சட்டம் 2017: *குடியிருப்பவர் வீட்டிற்குள் வீட்டு உரிமையாளர் காலை 7 மணிக்கு முன்பு, இரவு 8 மணிக்கு பின்னர் செல்ல கூடாது. *3 மாத வாடகையை மட்டுமே முன்பணமாக பெற வேண்டும். *ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட வாடகையை மட்டுமே பெற வேண்டும். *ஒப்பந்தம் முடியாமல் வீட்டை காலி செய்ய சொல்ல கூடாது. *கட்டாயம் ரசிது தர வேண்டும். *ஒப்பந்ததை பதிவு செய்ய வேண்டும். ஷேர் பண்ணுங்க

News July 8, 2025

வாடகை வீட்டில் வசிப்போர் கவனத்திற்கு 1/2

image

வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்னை, குடிநீர் பிரச்னை, கரண்ட் பிரச்னை என வாடகை வீட்டில் குடியிருப்போர் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம். அவர்களின் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்க வீட்டு உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு தந்தாலோ உதவி எண் (1800 599 01234) காஞ்சிபுரம் மாவட்ட அதிகாரியிடம் (9445000413, 9444964899) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க. தொடர்ச்சி

error: Content is protected !!