News December 10, 2025
உரிமை கோரப்படாத நிதி சொத்துக்கள் ஒப்படைப்பு முகாம்

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 12.12.2025 அன்று காலை 10.00 மணிக்கு “நீண்டகாலமாக உரிமை கோரப்படாத வங்கி வைப்புத் தொகைகள், காப்பீட்டு தொகைகள், பங்கு தொகைகள் ஆகியவற்றை உரியவர்களுக்கு ஒப்படைக்கும் முகாம்” மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.அனைத்து வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் இதர நிதி துறைகளின் கிளைகளில் 01.10.2025 முதல் 31.12.2025 வரை தொடர்ச்சியாக நடத்தப்படும்.
Similar News
News January 25, 2026
தருமபுரி: உழவர் சந்தை விலை நிலவரம்!

தருமபுரி உழவர் சந்தையில் இன்றைய (ஜன.25) காய்கறி விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி (1 கிலோ) தக்காளி: ரூ.25, கத்தரிக்காய்: ரூ.15, வெண்டைக்காய்: ரூ.30 முள்ளங்கி: ரூ.46, அவரைக்காய்: ரூ.26, கொத்தவரை: ரூ.46, பச்சைமிளகாய்: ரூ.30, பப்பாளி: ரூ.30, கொய்யா: ரூ.50 மற்றும் முருங்கைக்கீரை (50-கிராம்) ரூ.15 என விற்பனை செய்யப்படுகின்றன.
News January 25, 2026
தருமபுரி மக்களே! OTP வருதா? ALERT!

உங்கள் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் OTP எண்களைத் திருட சைபர் குற்றவாளிகள் ‘கால் பார்வேர்டிங்’ முறையைப் பயன்படுத்தலாம். இதைச் சரிபார்க்க உங்கள் மொபைலில் *#21# என்று டயல் செய்யுங்கள். அங்கு வேறு எண்களுக்கு ‘Forward’ ஆகிறதா என்பதை அறியலாம். அப்படித் தகவல்கள் கசிந்தால், உடனடியாக ##002# என டயல் செய்து அனைத்துப் பார்வேர்டிங் வசதிகளையும் ரத்து செய்யலாம்.
News January 25, 2026
தருமபுரி: தொழிலாளி மரணம்; தொடரும் மர்மம்!

தருமபுரி அடுத்த பாப்பாரப்பட்டியில் ஒரு தோட்டத்தில் கிருஷ்ணகிரியை சேர்ந்த மரம் ஏறும் தொழிலாளி வேலாயுதம் (40) வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று அங்குள்ள கரும்பு அரவை கூடத்தில் தூங்க சென்ற வேலாயுதம் நீண்ட நேரம் ஆகியும் எழும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் வந்து பார்த்த போது அவர் இறந்தது தெரியவந்தது. இந்த மர்ம மரணம் குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


