News January 11, 2025
உத்தரவை மீறி மதுபானங்கள் விற்றால் நடவடிக்கை

திருவள்ளுவர் தினத்தையொட்டி, வரும் 15ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் அன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் நேற்று (ஜன.10) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி மதுபானங்கள் விற்றால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதுடன், பாா்களுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News November 13, 2025
தி.மலை: இரவு ரோந்து போலீசார் விவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (நவ.12) இரவு 10 மணி முதல் இன்று (நவ.13) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 13, 2025
திருவண்ணாமலை: அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவு!

நாடு முழுவதும் நவம்பர் 14ஆம் தேதி முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்த நாள் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நவம்பர் 14 அன்று மாணவ, மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து பள்ளி தலைமை சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
News November 12, 2025
தி.மலை: தேர்வு இல்லாமல் மத்திய அரசு வேலை ரெடி!

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள்,<


