News May 14, 2024
உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு

ராமநாதபுரம் பட்டணம்காத்தான்
இசிஆர் பகுதிகளில் மாலை நேர தள்ளுவண்டி கடைகள், வாகனங்களில் விற்கப்படும் உணவுப் பொருட்கள் சுகாதார மின்றி விற்கப்படுவதாக புகார் எழுந்தது. மாவட்ட நியமன அலுவலர் விஜயகுமார் தலைமையில் அதிகாரிகள் இப்பகுதிகளில் உள்ள அசைவ உணவு கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது உணவு பொருட்களில் அதிக நிறமி சேர்த்த அரை கிலோ சிக்கன் வகைகள், கால் கிலோ அஜினமோட்டோ பறிமுதல் செய்து அழித்தனர்.
Similar News
News December 14, 2025
ராமநாதபுரம்: VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்?

ராமநாதபுரம் மக்களே, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது VAO-வின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (04567-230036) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.
News December 14, 2025
ராமநாதபுரம்: GPay, PhonePe, Paytm Use பண்றீங்களா? கவனம்!

ராமநாதபுரம் மக்களே இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News December 14, 2025
பரமக்குடி அருகே ரூ.50 லட்சத்தில் நலத்திட்ட பணி

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே எஸ் காவனூரில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய கூடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது இவ்விழாவில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார் உடன் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், கிழக்கு இளைஞரணி அமைப்பாளர் அந்தோணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


