News November 14, 2025
உக்கடம் இளைஞர் விபரீத முடிவு!

கோவை உக்கடம் கோட்டைமேடை சேர்ந்தவர் அந்தோணி நோவா(31). இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த இவர் கடந்த சில மாதங்களாகவே மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 9 ஆம் தேதி வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்ட உறவினர்கள் கோவை ஜிஎச்சில் அனுமதித்த நிலையில் நேற்று பலியானார். உக்கடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News December 14, 2025
கோவையில் பாலியல் தொழில்: அதிரடி கைது!

கோவை, இடையபாளையம் பழனியம்மாள் லே-அவுட் பகுதியில், பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக நான்கு பெண்களை, கவுண்டம்பாளையம் போலீசார் கைது செய்தனர். விசாரித்ததில், தடாகம் சாந்தாமணி கேஜி புதூர் பிரிவு பத்மாவதி (27,) மருதமலை அண்ணாநகர் எலிசபெத் ராணி (30), சிங்காநல்லூர் சாந்தி (40) என தெரியவந்தது. கைது செய்த பெண்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
News December 14, 2025
கோவை: மரத்தில் தூக்கிட்ட நிலையில் ஆண் சடலம்!

கோவை இருகூரில் இருந்து எல் அண்ட் டி பைபாஸ் செல்லும் சாலையில், நேற்று முன்தினம் இரவு, சாலையோர புளிய மரத்தில் ஆண் ஒருவர் தூக்கிட்டு இறந்து கிடப்பதாக, சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. விரைந்து சென்ற போலீசார் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, கோவை ஜி ஹெச் அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குபதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
News December 14, 2025
கோவை: சொந்த வீடு வேணுமா? இங்க போங்க!

பலரும் அறிந்திடாத ஓர் அற்புதமான மலைக்கோயில்தான் பதிமலை பாலமுருகன் கோயில். இக்கோயில் கோவை, ஒத்தக்கால் மண்டபம் பிச்சனூர் அருகே அமைந்துள்ளது. கல்யாண வரம், குழந்தை வரம் வேண்டும் பக்தர்கள், இங்கு மனமுருக வேண்டினால் விரைவில் பலிக்குமென்பது ஐதீகம். செங்கற்களை அடுக்கிவைத்து வேண்டினால், விரைவில் சொந்த வீடு வாங்கும் யோகம் அமையும் என்பது நம்பிக்கை. சொந்த வீடு கனவு காணும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்


