News October 11, 2025

ஈரோட்டில் வசமாக சிக்கிய இருவர்: அதிரடி கைது

image

ஈரோடு மாணிக்கம்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன், 48; நாராயண வலசு பகுதியில் டாஸ்மாக் பார் அருகே பெட்டிக்கடை வைத்துள்ளார். அங்கு போதையில் வந்த இருவர், முருகேசனிடம் தகராறில் ஈடுபட்டு முகத்தில் குத்தியதில் பற்கள் உடைந்து ரத்தம் கொட்டியது. வீரப்பன்சத்திரம் போலீசில் அவர் அளித்த புகாரின்படி, சரவணகுமார் 25, கதிரேசன் 24, ஆகியோரை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.

Similar News

News November 12, 2025

ஈரோடு: காவல் இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்

image

ஈரோடு மாவட்டம் காவல்துறை இன்று (11.11.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அவசர உதவிக்கு பொதுமக்கள் டயல் 100, சைபர் கிரைம்-1930 மற்றும் குழந்தைகள் உதவி-1098 என்ற எண்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஈரோடு மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

News November 12, 2025

அம்மாபேட்டை: உங்களுடன் ஸ்டாலின் முகாம்!

image

அம்மாபேட்டை வட்டார பகுதி மக்களுக்காக இன்று (12/11/25) புதன்கிழமை உங்களுடன் ஸ்டாலின் முகாம், ஆனைகவுண்டனுார், ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் திருமண மண்டபத்தில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது. முகாமில் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கை குறித்த மனுவை அதிகாரிகளிடம்
வழங்கி பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News November 11, 2025

ஈரோடு: நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்!

image

ஈரோடு மாவட்டத்தில் கீழ்கண்ட இடங்களில் நாளை (நவ.12) ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அதன்படி, நேதாஜி மார்க்கெட் வணிக வளாகம், ஈரோடு (ஈரோடு மாநகராட்சி மண்டலம்-4), ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் மண்டபம்-ஆனைகவுண்டனூர் (அம்மாபேட்டை வட்டாரம்), மாணிக்கம் முதலியார் திருமண மண்டபம்-சுள்ளிபாளையம்(பெருந்துறை வட்டாரம்), உக்கரம் சமுதாயக் கூடம், உக்கரம்(சத்தி வட்டாரம்) பகுதிகளில் நடைபெற உள்ளது.

error: Content is protected !!