News September 4, 2025
ஈரோட்டில் டிரைவர் தற்கொலை!

ஈரோடு மாவட்டம் இடையன்காட்டு வலசு பகுதியை சேர்ந்த சுரேஷ் (40), இவரது மனைவி கௌசல்யா (35). டிரைவராக வேலை செய்யும் இவருக்கு மது பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சரியாக வேலைக்கு செல்லாமல் குடிப்பதற்கு பணம் இல்லாமல் தவித்தார். கௌசல்யாவிடம் பணம் கேட்டதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த அவர் நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஈரோடு போலீசார் விசாரணை.
Similar News
News November 8, 2025
FLASH: ஈரோட்டில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை

ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரியில் பேராசிரியைக்கு கல்லூரி முதல்வர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் சம்பவம் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாள்களாக கல்லூரி மாணவிகள், பேராசிரியைகளுக்கு பாலியல் தொல்லை அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
News November 8, 2025
ஈரோடு: ரூ.7,500 வெகுமதி.. மக்களே உஷார்!

ஈரோடு மக்களே, வங்கிகளின் அசல் லோகோவை பயன்படுத்தி ரூ.7,500 வெகுமதி தருவதாக கூறி, பலரது ‘வாட்ஸ் ஆப்’ எண்ணுக்கு ஒரு ‘லிங்க்’ வருவதாக புகார் எழுந்துள்ளது. அது மோசடி செய்யும் நோக்குடன் சைபர் குற்றவாளிகளால் அனுப்பப்படும் ‘லிங்க்’ ஆகும். விவரம் தெரியாத பலரும் இதனால் ஏமாற்றப்படலாம். அந்த லிங்கை கிளிக் செய்தல் பணம் பறிபோகலாம். எனவே, உஷாரா இருங்க. இதுபோன்ற லிங்கை நம்பி ஏமாற வேண்டாம். SHARE பண்ணுங்க!
News November 8, 2025
ஈரோடு மாவட்ட காவலர் இரவு ரோந்து பணி விவரம்

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்தில் தங்கள் உட்கோட்ட அதிகாரிகளை கீழ்காணும் கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம். ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.


