News July 9, 2024
ஈரோடு: விமானப்படை தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் அக்டோபர் 18ஆம் தேதி நடைபெறும் அக்னிவீர் வாயு இந்திய விமானப்படை தேர்வுக்கு ஜூலை 8 முதல் (நேற்று) ஜூலை 28ஆம் தேதிவரை https://agnipathvayu.cdac.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இத்தேர்விற்கு 03.07.2004 முதல் 03.01.2008 வரை பிறந்த திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம் என ஈரோடு ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
Similar News
News July 9, 2025
ஈரோட்டில் இன்றைய வெப்பம் பதிவு

ஈரோடு மாவட்டம் முழுவதும் கடந்த மாதம் கனமழை பெய்து வந்ததால், வெயிலின் தாக்கம் குறைந்து இருந்தது. இருப்பனும், அக்னி நட்சத்திரம் நிறைவடைந்த பின் ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் வெயிலின் காணப்படுகிறது. இந்நிலையில், இன்று ஜூலை.09 ஈரோட்டில் 38.6° செல்சியஸ் பதிவாகியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
News July 9, 2025
ஈரோட்டில் அருமையான வேலை வாய்ப்பு!

ஈரோட்டில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள Sales Person பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 – ரூ.25,000 வழங்கபடும். டிகிரி முடித்தவர்கள் இங்கே <
News July 9, 2025
ஈரோடு: தம்பதி கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

சிவகிரி, தம்பதி ராமசாமி, பாக்கியத்தை ஏப்ரல் 28 தேதி கொலை செய்த கும்பல், வீட்டிலிருந்த 10 பவுன் நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றது. முன்னதாக சிவகிரி இரட்டைக் கொலை, திருப்பூா் மூவா் கொலை வழக்கில் நீதிமன்றக் காவலில் உள்ள ஆச்சியப்பன், மாதேஷ்வன், ரமேஷ் ஆகியோரிடம் காவல்துறையினரும் சிபிசிஐடி அதிகாரிகளும் விசாரணை நடத்தியதில் பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது.