News April 11, 2024

ஈரோடு மக்கள் எடுத்த அதிரடி முடிவு

image

ஈரோடு சூரம்பட்டி திரு.வி.க. வீதியை சேர்ந்த பொதுமக்கள் டாஸ்மாக் கடையை அகற்றாவிட்டால் மக்களவை தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக தங்கள் பகுதியில் பிளக்ஸ் பேனர் வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான், டாஸ்மாக் கடையை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினர்.

Similar News

News November 13, 2025

ஈரோடு குழந்தை தொழிலாளர் மீட்பு இலவச எண்!

image

ஈரோடு, தமிழ்நாட்டில் தொழிலாளர் துறை குழந்தை தொழிலாளர்களுக்கு எதிராக நடவடிக்கை தீவிரப்படுத்தியுள்ளது. குழந்தை தொழிலாளர்களை ஒழிப்பது மற்றும் மீட்பு செய்து அவர்களுக்கு மறுவாழ்வு வழங்குவது முக்கிய முன்னுரிமையாக உள்ளது. குழந்தைகள் வேலைக்கு அமர்த்தப்படுவதை கண்டால், உடனடியாக 1098 இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ள தொழிலாளர் துறை மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

News November 13, 2025

கடம்பூர் அருகே யானை உயிரிழந்தது!

image

சத்தியமங்கலம் வனச்சரகம், குத்தியாலத்தூர் காப்புக்காடு, கொண்டப்பநாயக்கன் பாளையம் காவல் சுற்று, வனப்பகுதிக்குள் வனப்பணியாளர்கள் ரோந்து சுற்றி வரும் பொழுது, பெண் யானை ஒன்று இறந்து கிடந்ததை பார்த்துள்ளனர். யானை உடலில் காயங்கள் இல்லாதால் இயற்கை மரணம் என வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும், யானை உடல் அரசு வழிகாட்டுதல் படி பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.

News November 13, 2025

ஈரோடு மாவட்டத்தில் 23 காவல் உதவி ஆய்வாளர்கள் மாற்றம்

image

ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றி வந்த 23 காவல் உதவி ஆய்வாளர்கள் (Sub-Inspectors) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த அதிரடி மாற்ற உத்தரவை ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா பிறப்பித்துள்ளார். புதிதாக வெளியிடப்பட்ட உத்தரவின்படி, மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட புதிய காவல் நிலையங்களில் உடனடியாக அறிக்கை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!