News November 14, 2025

ஈரோடு: சூப்பர் அரசு வேலை நல்ல சம்பளம்! APPLY NOW

image

மத்திய அரசு புலனாய்வுத்துறையில் உதவி மத்திய புலனாய்வு அதிகாரி பதவியில் 258 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு கல்வித்தகுதி BE, ME போதும். ஊதியம் ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக்<<>> செய்யவும். விண்ணப்பிக்க கடைசி தேதி நவ.16 ஆகும். இதை வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவியாக இருக்கும்.

Similar News

News December 16, 2025

ஈரோடு மாவட்டத்தில் வாரந்திர ஆய்வு கூட்டம்!

image

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இன்று (15.12.2025) மாவட்டத்தில் போதைப்பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, வாரந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் காவல் துறை, வருவாய் துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டு, போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள், கண்காணிப்பு பணிகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

News December 15, 2025

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்!

image

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று 15-12-2025 பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். அப்போது மாவட்ட ஆட்சியர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று அவர்களுடைய நிறை, குறைகளைக் கேட்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

News December 15, 2025

ஈரோடு: பட்டா வழங்க கோரி மனு!

image

சிறுவலூர் அடுத்த ஊஞ்சபாளையம் பகுதியில் வசிக்கும் 32 ஆதிதிராவிட குடும்பத்தினருக்கு கர்ச்சிபாளையத்தில் 2011 நிபந்தனை பட்டா கொடுக்கப்பட்டது. யாரும் தற்போது வரை குடி ஏறாததால் அந்த பட்டாக்களை ரத்து செய்து மாற்று சமூகத்தினர் ஆக்கிரமித்து பயன்படுத்தி வருவதாக குற்றம்சாட்டி சார் ஆட்சியர் நேர்முக உதவியாளர் பெரியசாமியிடம் 32 குடும்பத்தினர் ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தி பட்டா வழங்க கோரி மனு அளித்தனர்.

error: Content is protected !!