News September 29, 2025

ஈரோடு: சூத்தாடிய நான்கு பேர் மீது வழக்கு

image

ஆப்பக்கூடல் அருகே உள்ள வேம்பத்தி பகுதியில், சேவல் வைத்து சூதாடியதாக, நேற்று மாலை ஆப்பக்கூடல் போலீசார் நான்கு பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து இரண்டு சேவல் மற்றும் தொகை 350 பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்ட ஹரிஹரன். நந்தகுமார் ஜீவானந்தம் ஆறுச்சாமி ஆகிய நான்கு பேரின் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Similar News

News November 13, 2025

ஈரோடு மாவட்ட காவல்துறை அறிவுறை!

image

பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கோ அல்லது வீட்டை விட்டு வெளியில் சென்று தங்கும் சந்தர்ப்பங்களில் அருகில் உள்ள காவல் நிலையங்களில் தகவல் தெரிவித்துவிட்டு செல்லுமாறும் அறிவுறிதியுள்ளது. மேலும் வீட்டில் யாராவது தனியாக இருந்தாலோ அல்லது வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து பணம், நகை கொள்ளை அடிக்காமல் இருக்க முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக தெரிவிக்க மாவட்ட காவல்துறை சார்பாக அறிவுறுத்தப்படுகிறது.

News November 12, 2025

ஈரோட்டில் நடைபெற்று SIR திருத்த பணியை கலெக்டர் ஆய்வு!

image

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி ஈரோடு மாவட்டம் முழுவதும் வேகமாக நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று கணக்கீட்டு படிவங்களை வழங்கி வருகின்றனர். ஈரோடு சத்தியமூர்த்தி வீதியில் நடைபெறும் வாக்காளர் திருத்த கணக்கிட்டு படிவம் வழங்கும் பணியை ஆட்சியர் கந்தசாமி என்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்

News November 12, 2025

ஈரோடு மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு!

image

பெண்களின் பாதுகாப்பிற்கான “<>காவலன் செயலி<<>>”, ஆபத்தான சூழ்நிலைகளில் அவசர உதவிக்கு உதவும் ஒரு செயலி, இந்தச் செயலியில் உள்ள SOS பொத்தானை அழுத்துவதன் மூலம், உங்கள் இருப்பிட விவரங்கள் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக அனுப்பப்படும், இதனால் விரைவான உதவி கிடைக்கும். செயலியில் உள்ள (Kavalan Help) ஆப்பை உங்கள் தொலைபேசியில் பதிவிறக்கம் செய்யலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!