News October 19, 2025

ஈரோடு: இனி EB ஆபீஸ் போகத் தேவையில்லை!

image

அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை.நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் இங்கே கிளிக் செய்து “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 மற்றும் 1912 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

Similar News

News December 14, 2025

ஈரோட்டில் 351 போ் அதிரடி கைது

image

ஈரோடு மாவட்டத்தில் ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தினா் பயன்பெறும் வகையில் தமிழக அரசு பொதுவிநியோக திட்டத்தின் சாா்பில் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு விநியோகம் செய்யப்படும் ரேஷன் பொருள்களை சிலா் முறைகேடாக கடத்தி கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டி வருகின்றனா்.இதனை தடுக்கும் வகையில் இந்தாண்டு 135டன் அரிசியை கடத்திய 351 பேர் கைது செய்யப்பட்டனர்.

News December 14, 2025

பவானி அருகே சோகம்: ஒருவர் பலி

image

பவானி ஜிஎஸ்காலனி புதுமாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சாந்தப்பன் 54. இவர் சித்த வைத்தியம் பார்த்து வந்தார். கடந்த சில மாதங்களாக ஆண்டிபாளையம் பகுதியில் தங்கியிருந்தார். இந்நிலையில் திடீரென மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு வரும் வழியில் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கவுந்தப்பாடி காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

News December 14, 2025

ஈரோடு: இரவு ரோந்து காவல் அதிகாரிகள் விபரம்!

image

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!