News April 5, 2024
ஈரோடு அருகே கோர விபத்து: இருவர் பலி

மேட்டூரை சேர்ந்த டாக்டர் மாதப்பன் அவரது மனைவி டாக்டர் பத்மினி ஆகியோர் நேற்று காரில் ஈரோடு சென்று விட்டு மீண்டும் மேட்டூர் திரும்பி வந்த போது ஊராட்சி கோட்டை அருகே எதிரே வந்த லாரி மீது கார் மோதியது. பலத்த காயமடைந்த அவர்களை பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர்களை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பவானி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 7, 2026
ஈரோடு: இலவச வீடு.. எப்படி விண்ணப்பிக்கலாம்

ஏழைகளின் வீடு கட்டும் கனவை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசு ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டத்தின் மூலம் வீடு கட்டுவதற்கு ரூ.2.67 லட்சம் வரை மானியமாக வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://pmaymis.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஆதார், வங்கி கணக்கு விவரம், பட்டா, சிட்டா, வருமானச் சான்று ஆகியவை முக்கியம் ஆகும். (Share)
News February 7, 2026
புஞ்சைபுளியம்பட்டி: இளம் பெண் தற்கொலை

புஞ்சைபுளியம்பட்டி பகுதியைச் சேர்ந்த 19-வயது இளம் பெண்ணின் பெற்றோர் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனம்உடைந்த இளம் பெண், வீட்டின் பின்புறம் பயன்படுத்தப்படாத நிலையில் இருந்த அங்கன்வாடி கட்டிடத்திற்கு உள்ளே சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சென்ற போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக GH-க்கு அனுப்பி வைத்தனர்.
News February 7, 2026
ஈரோடு இரவு ரோந்து காவலர் விபரம்!

ஈரோடு மாவட்டத்தில் இன்று (06.02.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


