News April 23, 2025
ஈரோடு: அரசு போக்குவரத்து கழக புகார் எண் அறிவிப்பு

அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை *1800 599 1500* இந்த கட்டணமில்லா இலவச நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. இதை SHARE பண்ணுங்க.
Similar News
News November 10, 2025
எச்சரிக்கை..இதையெல்லாம் SHARE பண்ணாதீங்க!

1.கிரெடிட் கார்டு, வங்கி விவரங்கள் 2.வீட்டு முகவரி, ஃபோன் நம்பர்கள் 3.பாஸ்வர்ட்கள் 4 மருத்துவ விவரங்கள், மருந்துச் சீட்டுகள்
5 சட்ட பிரச்னைகள், வழக்கு விவரங்கள் 6.தனிப்பட்ட குடும்ப / உறவுப் பிரச்னைகள் 7.பணி மற்றும் வர்த்தக ரகசியங்கள் போன்ற விவரங்களை சமூக வலைத்தளங்களிலோ அல்லது எஐ போன்றவற்றிலோ பகிர வேண்டாம் என ஈரோடு மாவட்ட போலீசார் தெரிவித்துள்ளார்.
News November 10, 2025
இரண்டாம் நிலை காவலர் தேர்வில் 490 நபர்கள் ஆப்சன்ட்!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஈரோடு மாவட்டத்தில் 3174 இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வு நடந்தது. ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா தலைமையில் நடைபெற்ற இந்த தேர்வில் 3174 இடங்களுக்கு தேர்வு நடந்தது இன்று நடந்த தேர்வில் 2684 தேர்வர்கள் மட்டுமே தேர்வு எழுதினர். 490 நபர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்தும் தேர்வு எழுதவில்லை.
News November 9, 2025
ஈரோடு சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவு மூலம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி யதார்த்தமான வீடியோ அழைப்புகளை சமூக ஊடகங்கள், டேட்டிங் ஆன்லைன் தளங்களில் உருவாக்கி முன் பின் தெரியாத நபர்களிடம் இருந்து வீடியோ கால் அழைப்புகள் வரும்என்பதால் எடுக்க வேண்டாம் அவ்வாறு
எடுப்பதினால் நமது புகைப்படத்தை பதிவு செய்து ஆபாசமாக
சித்தரித்து நம்மிடம் பணம் பறிக்கக்கூடும் என ஈரோடு சைபர் க்ரைம் போலீசார் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


