News April 30, 2024

ஈரோடு: ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

image

அந்தியூர் தேவர் மலைப்பகுதியை சேர்ந்தவர் சாக்சி (35). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு இன்று பிரசவவலி ஏற்பட்டது. 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவருக்கு அதிக வலி ஏற்பட்டது. பின்னர், நடுக்கத்தில் நிறுத்தப்பட்டு 108 ஆம்புலன்ஸில் பிரசவம் பார்க்கப்பட்டது. அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து பர்கூர் ஆரம்ப சுகாதர நிலையத்தில் சேர்க்கப்பட்டார்.

Similar News

News December 13, 2025

ஈரோடு: மின் கட்டணத்தை குறைக்க வேண்டுமா?

image

சூரிய மின் சக்தியை ஊக்குவிக்கும் வகையில் வீடுகளில் சூரிய ஒளி மின்சார பேனல்கள் அமைக்க மத்திய அரசு சார்பில் பிரதமரின் சூரிய ஒளி மின்சார திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டம் நடுத்தர குடும்பத்தினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இத்திட்டத்தில் பயன்பெற <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கவும். மேலும் அறிய ஈரோடு உதவி செயற்பொறியாளரை அணுகவும். இதனை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

News December 13, 2025

அம்மாபேட்டையில் வசமாக சிக்கிய நபர்!

image

ஈரோடு: அம்மாபேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையிலான போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பூனாச்சி பேருந்து நிறுத்தத்தில் சட்டவிரோதமாக லாட்டரி விற்றுக் கொண்டிருந்ததைக் கண்டனர். போலீசார் அவரைப் பிடித்து விசாரித்ததில், பரமத்தி வேலூர் அருகே உள்ள வடக்கு நல்லிப்பாளையத்தைச் சேர்ந்த கருப்பசாமி (வயது 48) என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து கருப்பசாமியைக் போலீசார் கைது செய்தனர்.

News December 13, 2025

சென்னிமலையில் கோர விபத்து!

image

ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் பெருந்துறை ரோடு அருகே உள்ள கேஸ் பங்க் அருகில் இன்று இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒரு இளைஞர், லாரியில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காகப் பெருந்துறை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த அந்த இளைஞர் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!