News July 16, 2024

இலவச தையல் எந்திரம் வழங்கிய கலெக்டர்

image

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பாக, 6 பயனாளிகளுக்கு ரூ.36 ஆயிரத்து 720 மதிப்பில் இலவச தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு நேற்று வழங்கினார். உடன், மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) பன்னீர் செல்வம் , மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பத்மலதா உள்ளிட்ட பலர் உள்ளனர்.

Similar News

News July 11, 2025

புகையிலை பெருட்கள் கடத்தியவர் கைது

image

கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஜூஜூவாடி சோதனை சாவடியில் போலீசார் நேற்று (ஜூலை 9) வாகன சோதனை செய்தபோது, ரூ.1,42,656 மதிப்பிலான தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் ரூ.2,015 மதிப்பிலான மதுபானம் கண்டறியப்பட்டது. அவற்றை கடத்தி வந்த நபர் கைது செய்யப்பட்டு, பொருட்கள் மற்றும் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.

News July 10, 2025

கிருஷ்ணகிரி மாவட்டம் இன்று இரவு ரோந்து பணி விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (ஜூலை. 10) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல்துறை அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம் என தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News July 10, 2025

எவ்வளவு கடன் உதவி பெறலாம்? 2/2

image

சிறு தொழில் / வியாபாரம் செய்ய தனி நபர்களுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. அதேபோல் குழுவிற்கு அதிகபட்ச கடன் தொகை ஒரு நபருக்கு ரூ. 1,25,000-மும், அதிகபட்ச கடன் தொகை ஒரு குழுவிற்கு ரூ. 15 லட்சமும் வழங்கப்படும். விண்ணப்பத்தை <>இந்த <<>>லிங்கில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு (04343-235655, 04343-239301-02) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!