News August 19, 2024
இலவச சைக்கிள்கள் பிட்டிங் செய்யும் பணி தீவிரம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் வகையில் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உதிரி பாகங்களை இணைத்து சைக்கிள் பிட்டிங் செய்யும் பணிகளில் வெளிமாநிலத்தை சேர்ந்த பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இப்பள்ளியில் தயாராகும் இலவச சைக்கிள்கள் வாகனங்கள் மூலம் சுற்றுவட்டாரத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
Similar News
News January 15, 2026
கள்ளக்குறிச்சியில் பகீர் – இளம்பெண் கடத்தல்!

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். நேற்று வீட்டில் தனியாக இருந்த அவரை திடீரென காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடியள்ளனர். அப்போது, புதுப்பாலப்பட்டை சேர்ந்த மணிவேல் (30) அந்த பெண்ணை கடத்திச் சென்றது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவர்கள் அளித்த புகாரின் பேரில், மணிவேல் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News January 15, 2026
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொங்கல் விழா

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் மற்றும் ஆட்சியர் எம் எஸ் பிரசாந்த் ஆகியவர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து சமத்துவ பொங்கல் கொண்டாடினர். இந்த நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரியும் காவலர்கள் உடன் இருந்தனர்.
News January 14, 2026
கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து பணி காவல் அதிகாரிகள் விவரம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரவு ரோந்து பணி காவல் அதிகாரிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் இரவு நேரங்களில் ஏதேனும் அசம்பாவிதங்கள் சம்பவங்கள் ஏற்பட்டால் உடனடியாக மேலே கொடுக்கப்பட்டுள்ளது. தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் எனவும் கூடுதல் எண்ணாக 100 ஐ தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


