News April 9, 2024

இருவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை

image

பொட்டல்பச்சேரி கிராமத்தில் 2017ஆம் ஆண்டு துரைராஜ் என்பவருக்கும் – செல்லப்பாண்டி, எலிசபெத் ஆகியோருக்கும் இடையே கொடுக்கல்-வாங்கல் பிரச்சனை ஏற்பட்டது. சிக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடலாடி மாவட்ட உரிமையியல் (ம) நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று (ஏப்.8) செல்லப்பாண்டி, எலிசபெத் ஆகியோருக்கு 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Similar News

News December 14, 2025

ராமநாதபுரத்தில் புதிய ஊராட்சி ஒன்றியம்: எம்.பி

image

சிக்கல் பகுதியை தலைமை இடமாகக் கொண்டு, புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்க வேண்டும் என, தமிழ்நாடு முதலமைச்சருக்கு இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கடிதத்தில் கடலாடி ஒன்றியத்திலிருந்து சிக்கல் சுற்றுவட்டார ஊராட்சிகளை பிரித்து, சிக்கல் பகுதியை தலைமை இடமாகக் கொண்டு, புதிய ஒன்றியத்தை அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

News December 14, 2025

கமுதி அருகே கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவர்கள்

image

கமுதி பகுதியைச் சோ்ந்த ராமு மகன் ராமா் (27). இவரை கமுதி கண்ணார்பட்டி மதுபான கடையின் பின்புறத்தில் 4 இளைஞா்கள் கத்தியால் தாக்கி அவரது கைப்பேசியில் ஜிபே மூலம் ரூ.800 தங்களது வங்கி கணக்குக்கு அனுப்பியதுடன் கைப்பேசியையும் பறித்துக் கொண்டனர். போலீசார் கமுதியை சோ்ந்த வசந்தகுமாா்( 18), முத்துமாரியம்மன் நகரைச் சோ்ந்த லிங்கம் (21) மற்றும் 16, 17 வயதுடைய 2 சிறுவா்கள் உள்பட 4 பேரை கைது செய்தனர்.

News December 14, 2025

இராமநாதபுரம் மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று (டிச.13) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!