News April 9, 2024

இருளா் சமுதாய மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

image

திருவாரூா் மாவட்டத்தில் பரவலாக இருளா் சமுதாயத்தினா் வசித்து வருகின்றனா். அந்த வகையில் நீடாமங்கலம் தாலுகா, எடக்கீழையூா் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட பழங்குடி இருளா் சமுதாயத்தினா் வசித்து வருகின்றனா். திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு நேற்று வந்த அவர்கள் சாதிச் சான்றிதழ் வழங்காததால் மக்களவைத் தோ்தலை புறக்கணிக்கவுள்ளதாக தெரிவித்தனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Similar News

News December 11, 2025

திருவாரூர்: BE படித்தவர்களுக்கு அரசு வேலை

image

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் உள்ள திட்ட பொறியாளர், டெக்னிக்கல் நிபுணர் உள்ளிட்ட பதவிகளுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 23
3. வயது: 33 (அதிகபட்சம்)
4. சம்பளம்: ரூ.25,000 – ரூ.55.000
5. கல்வித்தகுதி: BE
6. நேர்காணல் நடைபெறும் நாள்: 16.12.2025
7. மேலும் தகவலுக்கு: <>Click Here<<>>
மற்றவர்களும் பயன்பெற இதனை ஷேர் பண்ணுங்க….

News December 11, 2025

திருவாரூர்: 300 கிலோ குட்கா பறிமுதல்

image

எரவாஞ்சேரி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை நிறுத்தி, அவரிடம் இருந்த மூட்டைகளை சோதனை செய்த போது அதில் 10கி புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரித்ததில் அவர் கும்பகோணத்தைச் சேர்ந்த தலபத்குமார்(31) என்பதும், அவர் மேலும் 300கி குட்கா பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. உடனடியாக போலீசார் அவரை கைது செய்து, குட்காவை பறிமுதல் செய்தனர்.

News December 11, 2025

திருவாரூர்: அரசு பள்ளி மாணவர் மாநிலத்தில் முதலிடம்

image

மாநில அளவிலான கலைத்திருவிழா புதுக்கோட்டையில் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் கீ போர்டு வாசித்தல் போட்டியில் திருவாரூர் மாவட்டம், பேரளம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு பயிலும் ஜெரிஸ் என்ற மாணவர் கலந்து கொண்டு மாநில அளவில் முதலிடம் பெற்றார். இதையடுத்து பள்ளிக்கு வருகை தந்த வெற்றி பெற்ற மாணவருக்கு, பள்ளியில் சால்வை அணிவித்து வாழ்த்தி, பாராட்டு தெரிவித்தனர். ஜெரிஸை நீங்களும் வாழ்த்தலாமே!

error: Content is protected !!