News February 24, 2025
இபிஎஸ்யிடமே கேளுங்கள்: செங்கோட்டையன்

கோபிசெட்டிபாளையம் பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 77வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனிடம், ‘ஆடும், ஓநாயும் ஒன்று சேர முடியாது’ என இபிஎஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, அவரிடமே கேட்டுக் கொள்ளுங்கள்’ என்றார்.
Similar News
News July 9, 2025
நஞ்சை புளியம்பட்டி: வாய்க்காலில் மிதந்த தொழிலாளி சடலம்

தேவகோட்டை கண்ணாகுடி பகுதியை சேர்ந்தவர் கர்ணன் (37). கட்டிட தொழிலாளி. இவர் பங்களாப்புதூர் அருகே நஞ்சை புளியம்பட்டியில் தங்கியிருந்து வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று அந்த பகுதியில் செல்லும் அரக்கன்கோட்டை வாய்க்காலில் கர்ணன் சடலமாக மிதந்தார். அவரது உடலை பங்களாப்புதூர் காவல்துறையினர் கைப்பற்றினர். சாவுக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.
News July 9, 2025
ஈரோட்டில் இன்றைய வெப்பம் பதிவு

ஈரோடு மாவட்டம் முழுவதும் கடந்த மாதம் கனமழை பெய்து வந்ததால், வெயிலின் தாக்கம் குறைந்து இருந்தது. இருப்பனும், அக்னி நட்சத்திரம் நிறைவடைந்த பின் ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் வெயிலின் காணப்படுகிறது. இந்நிலையில், இன்று ஜூலை.09 ஈரோட்டில் 38.6° செல்சியஸ் பதிவாகியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
News July 9, 2025
ஈரோட்டில் அருமையான வேலை வாய்ப்பு!

ஈரோட்டில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள Sales Person பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 – ரூ.25,000 வழங்கபடும். டிகிரி முடித்தவர்கள் இங்கே <