News March 22, 2024
இன்று முதல் போட்டி தேர்வு மையம் தொடக்கம்

தமிழகத்திலேயே முதன்முறையாக திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள காலாஞ்சிபட்டியில் ரூபாய் 15- கோடி செலவில் கலைஞர் நூற்றாண்டு அரசு போட்டி தேர்வு இலவச மையத்தை கடந்த சில மாதங்கள் முன்பு தமிழக முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. தமிழக அரசு மற்றும் ஒன்றிய அரசு நடத்தும் தேர்வுக்கு இங்கு இலவச பயிற்சி வகுப்பு இன்று துவங்கியது.
Similar News
News November 7, 2025
திண்டுக்கல்: நடந்து சென்ற முதியவர் மீது கார் மோதி விபத்து

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகே (நவம்பர் 6) இன்று நடந்து சென்ற முதியவர் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது, இந்த விபத்தில் முதியவரின் கால் எலும்பு முறிவு ஏற்பட்டது, அருகில் இருந்த பொதுமக்கள் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ஒட்டன்சத்திரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,
News November 7, 2025
திண்டுக்கல்லில் தட்டச்சு தேர்வு முடிவுகள் வெளியீடு

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று கடந்த ஆகஸ்ட் மாதம் 30 மற்றும் 31 ஆகிய இரு தேதிகளில் மாவட்டம் முழுவதும் சுமார் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் எழுதிய ஜூனியர் மற்றும் சீனியர் தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சு தேர்விற்கான முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டுள்ளது. இம்முடிவுகளை https://tndtegteonline.in/GTEOnline/GTEResultAUG2025.php என்ற இணையதளத்தில் காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 7, 2025
திண்டுக்கல் மாவட்டத்தின் இரவு ரோந்து காவலர்கள்!

திண்டுக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.மேலும் திண்டுக்கல், ஆத்தூர் ,நிலக்கோட்டை, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


