News November 19, 2025
இன்றும் என்கவுன்ட்டர்.. 7 மாவோயிஸ்ட்கள் பலி

ஆந்திரா – ஒடிசா எல்லை பகுதியில் இன்று மாவோயிஸ்ட்கள் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர். இதில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக, ஆந்திரா உளவுத்துறை ADGP மகேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். மாவோயிஸ்ட் முக்கிய தலைவர்கள் இன்று கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக, நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் <<18318822>>மாவோயிஸ்ட்<<>> முக்கிய தளபதி ஹிட்மா உள்ளிட்ட 6 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 15, 2026
விவசாயிகள் சந்தோசமா இருக்கணும்.. ரஜினி வாழ்த்து!

தனது வீட்டு வாசலில் காலை முதல் காத்திருந்த ரசிகர்களை நோக்கி, புன்னகையுடன் கையசைத்த அவர், அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளை கூறினார். மேலும், நாட்டின் முதுகெலும்பான விவசாயிகள் சந்தோசமாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். பனியையும் பொருட்படுத்தாமல் காலை முதலே காத்திருந்த ரசிகர்கள் அவரை பார்த்தும் ‘தலைவா.. தலைவா’ என கத்தி கூச்சலிட்டனர்.
News January 15, 2026
அரசியல் தலைவர்களின் பொங்கல் வாழ்த்துகள் (PHOTOS)

உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், உழைப்புக்கும் இயற்கைக்கும் நன்றி கூறும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவற்றை தெரிந்துகொள்ள மேலே உள்ள புகைப்படங்களை வலதுபுறம் SWIPE செய்யுங்கள். உங்கள் பொங்கல் வாழ்த்தை கமெண்ட்டில் பதிவிடுங்கள்.
News January 15, 2026
BREAKING: பொங்கல் நாளில் விஜய் அறிவித்தார்

உலகமெங்கும் உள்ள தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார் விஜய். ஏற்கெனவே, தமிழ்ப் புத்தாண்டு தை மாதமா, சித்திரை மாதமா என்ற சர்ச்சை இருந்து வரும் நிலையில், தன்னுடைய இந்த வாழ்த்தில் தமிழ்ப் புத்தாண்டு என அவர் பதிவிட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது. இவ்வளவு நாள் ’ஜனநாயகன்’ பற்றி எதுவும் பேசாமல் இருந்த விஜய்யிடமிருந்து இந்த ட்வீட் வந்திருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.


