News November 19, 2025
இன்றும் என்கவுன்ட்டர்.. 7 மாவோயிஸ்ட்கள் பலி

ஆந்திரா – ஒடிசா எல்லை பகுதியில் இன்று மாவோயிஸ்ட்கள் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர். இதில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக, ஆந்திரா உளவுத்துறை ADGP மகேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். மாவோயிஸ்ட் முக்கிய தலைவர்கள் இன்று கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக, நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் <<18318822>>மாவோயிஸ்ட்<<>> முக்கிய தளபதி ஹிட்மா உள்ளிட்ட 6 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 23, 2026
மோடியின் கூட்டத்தில் அதிகார துஷ்பிரயோகம்: ராமதாஸ்

PM மோடி பங்கேற்கும் கூட்டத்தில் அனுமதி பெறாத மாம்பழம் சின்னத்தை பயன்படுத்துவது அதிகார துஷ்பிரயோகம் என ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையம்(ECI) அங்கீகரிக்காத சின்னத்தை பொதுக்கூட்ட மேடையில் காட்சிப்படுத்துவது சட்டவிரோதம் எனவும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார். பாமகவுக்கு யார் தலைவர் என்பதில் ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் போக்கு நிலவுகிறது.
News January 23, 2026
ஒரே நாளில் ₹1 லட்சம் கோடியை இழந்த அதானி

அதானி குழுமத்தின் பங்குகள் இன்று ஒரே நாளில் ₹1 லட்சம் கோடி இழப்பை சந்தித்துள்ளது. முதலீடு விவகாரத்தில் லஞ்சம் கொடுக்க முயன்ற புகாரில், அதானிக்கு சம்மன் அனுப்ப அனுமதி கேட்டு அமெரிக்க பங்குச்சந்தை ஆணையம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இதனால் அதானி குழுமத்தின் பங்கு 10% வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் எதிரொலியால் அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள LIC-க்கும் ₹12,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
News January 23, 2026
கேரளாவுக்கு மூன்றாவது பக்கம் உள்ளது: PM மோடி

வரவிருக்கும் தேர்தல் கேரளாவின் நிலையையும் திசையையும் மாற்றும் என PM மோடி சூளுரைத்துள்ளார். திருவனந்தபுரத்தில் நடந்த பாஜக பேரணியில் பேசிய அவர், கேரளா இதுவரை இரண்டு பக்கங்களை (UDF, LDF) மட்டுமே பார்த்துள்ளது. ஆனால், மூன்றாவதாக ஒரு பக்கம் உள்ளது. அது வளர்ச்சி & நல்லாட்சியை கொண்ட பாஜக என்றார். சபரிமலை தங்கத் திருட்டு விவகாரம் பற்றி பேசிய அவர், இதன் தீவிர விசாரணைக்கு மோடி உத்தரவாதம் தருகிறேன் என்றார்.


