News November 19, 2025
இன்றும் என்கவுன்ட்டர்.. 7 மாவோயிஸ்ட்கள் பலி

ஆந்திரா – ஒடிசா எல்லை பகுதியில் இன்று மாவோயிஸ்ட்கள் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர். இதில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக, ஆந்திரா உளவுத்துறை ADGP மகேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். மாவோயிஸ்ட் முக்கிய தலைவர்கள் இன்று கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக, நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் <<18318822>>மாவோயிஸ்ட்<<>> முக்கிய தளபதி ஹிட்மா உள்ளிட்ட 6 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 21, 2026
யாரும் எங்களை அணுகவில்லை: பிரேமலதா

கூட்டணிக்காக இந்த நிமிடம் வரை யாரும் தங்களை அணுகவில்லை என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். மேலும், இன்னும் கூட்டணி குறித்து தாங்கள் முடிவெடுக்கவில்லை எனவும், அதுகுறித்து உரிய நேரத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என்றும் கூறியுள்ளார். அத்துடன், தற்போது பியூஷ் கோயல் எதற்கு தமிழகம் வந்திருக்கிறார் என்பது கூட தனக்கு தெரியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
News January 21, 2026
BREAKING: விஜய் கட்சிக்கு பொதுச் சின்னம்?

தவெகவின் சின்னம் வெளியாகும்போது உலகமே அதனை உற்றுநோக்கும் என்றும் அக்கட்சியினர் கூறிவந்தனர். இந்நிலையில், தவெகவுக்கு பொதுச் சின்னம் அளிக்க ECI பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை தேர்தலில் போட்டியிடாமல் அங்கீகரிக்கப்படாத கட்சியாக தவெக உள்ளதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம். விசில், மோதிரம் என ஏற்கெனவே பேச்சு எழுந்துள்ள நிலையில், எந்த சின்னம் கொடுத்தால் சரியாக இருக்கும்?
News January 21, 2026
தற்கொலைக்கு சமம் என்று சொல்லிவிட்டு கூட்டணியா?

அதிமுக-பாஜக கூட்டணியில் அமமுக இணைந்துள்ளதாக<<18913412>> TTV தினகரன்<<>> அறிவித்துவிட்டார். இந்நிலையில் அதிமுக குறித்த அவரது கடந்த ஒரு மாதகால பேச்சுகள் தற்போது வைரலாகி வருகின்றன. EPS -உடன் கூட்டணி அமைத்தால் அது தற்கொலைக்கு சமம் என்றும், EPS என்ற தீயசக்தி வரும் தேர்தலில் வீழ்த்தப்பட வேண்டும் என்றும் பேசியிருந்தார். இந்நிலையில் இன்று அதே அதிமுகவுடன் TTV கூட்டணி வைத்துள்ளாரே என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.


