News November 19, 2025

இன்றும் என்கவுன்ட்டர்.. 7 மாவோயிஸ்ட்கள் பலி

image

ஆந்திரா – ஒடிசா எல்லை பகுதியில் இன்று மாவோயிஸ்ட்கள் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர். இதில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக, ஆந்திரா உளவுத்துறை ADGP மகேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். மாவோயிஸ்ட் முக்கிய தலைவர்கள் இன்று கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக, நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் <<18318822>>மாவோயிஸ்ட்<<>> முக்கிய தளபதி ஹிட்மா உள்ளிட்ட 6 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Similar News

News January 18, 2026

திமுக கூட்டணிக்குள் எந்த குழப்பமும் இல்லை: ரகுபதி

image

திமுக கூட்டணி உடையும் என்ற சிலரின் எதிர்பார்ப்பு நிறைவேறாது என அமைச்சர் ரகுபதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். திமுக கூட்டணிக்குள் எந்த குழப்பமும் கிடையாது என்றவர், காங்கிரஸ் தங்களோடு இருக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் திமுக கூட்டணியை விட்டு யாரையும் அனுப்புவது கிடையாது எனவும் அனைவரையும் அரவணைப்பதே CM ஸ்டாலினின் பழக்கம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

News January 18, 2026

ரசிகர்களை நிச்சயம் பெருமைப் படுத்துவேன்: அஜித்

image

துபாய் ரேஸில் கார் விபத்தில் சிக்கியதால் ஏமாற்றமடைந்த ரசிகர்களிடம் நடிகர் அஜித் Sorry கேட்டுள்ளார். இந்நிலையில் தனக்கு ஆதரவு கொடுக்க திரண்டு வந்த ரசிகர்களுக்கு, தான் ரேஸ் ஓட்டுவதையும், எங்களது அணி வெல்வதை பார்க்க முடியாததும் வருத்தம் அளிப்பதாக அஜித் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், எங்கள் அணி நிச்சயம் ஒருநாள் ரசிகர்களை பெருமைப்படுத்தும் என அஜித் சத்தியம் செய்துள்ளார்.

News January 18, 2026

மகளிருக்கு ₹2,500.. புதுச்சேரி CM தொடங்கி வைக்கிறார்

image

புதுச்சேரியில் சிவப்பு நிற ரேஷன் அட்டை வைத்துள்ள குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்பட்டு வந்த ₹1,000 உதவித்தொகையை சமீபத்தில் ₹2,500 ஆக உயர்த்தி அரசு அறிவித்தது. இந்நிலையில், இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த தொகை விரிவாக்க திட்டத்தை CM ரங்கசாமி ஜன.22-ல் தொடங்கி வைக்கிறார். நேற்று, அனைத்து மகளிருக்கும் ₹2,000 வழங்கப்படும் என EPS வாக்குறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!