News June 19, 2024
இடைத்தேர்தல்: பாமக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக, பாமக வேட்பாளர் சி.அன்புமணி விக்கிரவாண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தேர்தல் அலுவலரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். வரும் ஜூலை 10ஆம் தேதி வாக்குப்பதிவு, 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது. அதிமுக, தவெக போட்டியிடவில்லை என அறிவித்ததால், மும்முனை போட்டியாக இருப்பதோடு, தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
Similar News
News January 16, 2026
திருவள்ளூர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

உலக பொதுமறையாம் திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை கௌரவிக்கும் விதமாக ஆண்டு தோறும் ஜன.16 ம் தேதி திருவள்ளுவர் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு
விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு வருவாய்த்துறை சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
நிகழ்வில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.
News January 16, 2026
விழுப்புரம்: ஆட்டோவில் செல்வோர் கவனத்திற்கு!

விழுப்புரத்தில் ஆட்டோக்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக மக்கள் அடிக்கடி புகார் தெரிவிக்கின்றனர். விதிமுறைபடி ஆட்டோக்கள் முதல் 1.8 கி.மீ க்கு ரூ.25ம், அதற்கு மேல் செல்லும் ஒவ்வொரு கி.மீ க்கும் ரூ.12, காத்திருப்பு கட்டணம் 5 நிமிடங்களுக்கு ரூ.3.50 வசூலிக்கலாம். இரவு (11-5) நேரத்தில் 50% கூடுதலாக கட்டணம் வசூலிக்கலாம். இதை விட கூடுதல் கட்டணம் வசூலித்தால்<
News January 16, 2026
விழுப்புரம்: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் உடனே SHARE பண்ணுங்க!


