News June 18, 2024
“இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியே வெற்றி பெறும்”

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்திருப்பது நல்லது என மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் நேற்று அவர் அளித்த பேட்டியில், “அரசியல் கருத்து சொல்ல எனக்கும் உரிமை இருக்கிறது. ஏனெனில், இது ஜனநாயக நாடு. எனக்கும் வாக்களிக்கும் உரிமை இருக்கிறது. இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி தான் வெற்றி பெறும். ஏனெனில், அந்தக் கட்சிக்கு அதிக செல்வாக்கு உள்ளது” எனக் கூறினார்.
Similar News
News January 20, 2026
காஞ்சிபுரத்தில் திக்குமுக்காடும் மக்கள்!

காஞ்சி: சேக்குபட்டியில் நாய்கள் அதிகமாக வீதியில் சுற்றுகின்றன. தாலுகா அலுவலகம், பேரூந்து நிலையம் செல்ல கவரை வழியாக செல்லவேண்டும். இந்தத் தெருவில் நாய்கள் இருப்பதால் மக்கள் பயத்துடன் வீதியை கடக்கும் நிலை உள்ளது. மேலும் இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கு இந்த நாய்களால் விபத்து ஏற்படுகிறது. ஆகையால், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
News January 20, 2026
காஞ்சிபுரம்: ரூ.20 தந்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும்!

காஞ்சிபுரம் மக்களே.., உங்களுக்கு ரூ. 2 லட்சம் காப்பீடு வழங்க மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி சுரக்ஷா பீம யோஜனா’ திட்டம் உள்ளது. ஆண்டிற்கு ரூ.20 மட்டும் செலுத்தினால் போதும். இந்தத் திட்டத்திற்கு யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். இதற்கான படிவத்தை <
News January 20, 2026
காஞ்சிபுரம் கலெக்டர் உத்தரவிட்டார்!

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று(ஜன.19) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர். மொத்தம் 253 மனுக்கள் வழங்கப்பட்டன. அவைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டுள்ளார்.


